சென்னை, ஆக,11- சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீரின் தேவையை சமாளிக்கும் வகையில் நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைப்பது அதிகப்படுத்த நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெட்டேரியில் கொள்ளளவை அதிகரிக்க நீர்வளத்துறை திட்டமிட்டு உள்ளது. ரெட்டேரியில் தூர்வாரி வண்டல் மண்ணை அகற்றி நீர்தேக்க அளவை 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன்கன அடியாக அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோர முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.43.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெட்டேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், போரூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடி புனரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் டெண்டர் பணிகள் முடிவடைந்து இந்த மாத இறுதிக்குள் பணிகள் துவங்கப்பட உள்ளது.