states

திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக் கோரி சிபிஎம் போராட்டம்

திண்டுக்கல், டிச.1- திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம் படுத்த வலியுறுத்தி மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் டிசம்பர் 1 வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலை மை வகித்தார். மாநில செயற்  குழு உறுப்பினர்கள் மதுக்  கூர் இராமலிங்கம், கே.பால பாரதி, மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி ஆகியோர் உரையாற்றினர்.  திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்  துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வச திகளை மேம்படுத்த வேண் டும். புற நோயாளிகள் உள் நோயாளிகள் வருகை எண்  ணிக்கைக்கு ஏற்ப மருத்து வர்கள், செவிலியர்கள்,  மருந்தாளுநர்கள், ரத்த மாதிரி பரிசோதகர்கள், நுண்  கதிர் வீச்சாளர்கள், பல்  நோக்கு சுகாதார ஊழி யர்கள் உள்ளிட்டோர் நிய மிக்க வேண்டும். மிக முக்கிய  நோய் பிரிவுகளான நரம்பி யல், இருதயவியல், சிறுநீரக வியல், புற்று நோயியல் உள்  ளிட்ட பிரிவுகள் துவங்க வேண்டும். தலைக்காயம் உள்ளிட்ட மிக முக்கிய பிரிவு களில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;