விருதுநகர், ஆக.27-
விருதுநகர் சந்தையில் துவ ரம்பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு என அனைத்து பருப்புகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள் ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். எனவே, நியாய விலைக் கடை களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு :
துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு வகையின் விலை கடந்த வாரம் ரூ.12500 என இருந்தது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு திடீரென ரூ.500 வரை உயர்ந்துள்ளது. இதனால், குவிண்டால் ஒன்று ரூ.13ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வருகிறது.
இதேபோல், துவரம் பருப்பு புதுஸ் லையன் வகை கடந்த வாரம் ரூ.14800 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மூட்டை ஒன்று 15200 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகையானது கடந்த வாரம் ரூ.11,800 என்ற விலைக்கு விற்கப் பட்டது. இந்தநிலையில் ஒரே வாரத்தில் மூட்டை ஒன்றுக்கு திடீரென ரூ.700 வரை உயர்த்ப்பட்டு, தற்போது மூடடை ஒன்று ரூ.12500க்கு விற்கப்படு கிறது.
பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,300க்கு விற்பனை செய் யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,400 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பட்டாணி பருப்பு இந்தியா வகை யானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.5,900 ன்ற விலைக்கு விற்பனையா னது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. எனவே, ரூ. 6,200 என விற்பனையாகிறது.
இதேபோல் பட்டாணி வெள்ளை இந்தியா 100 கிலோ ரூ.6,200க்கு விற்கப் பட்டது. தற்போது ரூ.300 உயர்ந் துள்ளது. எனவே, ரூ.6500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பருப்பு வகைகளின் விலையா னது தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தாங்கள் வாங்கி சமைக்கும் பருப்பின் அளவை குறைத்து வாங்கி வருகின்ற னர். எனவே, மாநில அரசானது, நியாய விலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் பட்டாணி பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டுமென வும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.