states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அனைத்திலும் பாஜக தோல்வி:  டிம்பிள் யாதவ் எம்.பி.

சமாஜ்வாதி எம்.பி. டிம்பிள் யாதவ் பேசுகையில், “பாஜக  ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. பெண்கள் உரிமை  மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பதற்கு உதாரணம் மணிப்பூர் சம்பவம். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் மகளி ருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பாஜக ஏமாற்றி வருகிறது” என்றார்.

பெரியாரின் பாதையில்...! சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேசுகையில், “சாதி, மத வேறுபாடுகள் இன்றி மொழி மீது பற்றோடு தமிழ்நாடு இருப்பது பெருமையாக உள்ளது; பெரியாரின் சுயமரியாதை மாநாட்டின் வழியில் இந்த மாநாடு நடைபெறுகிறது” என்றார். தில்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் குறிப்பிடு கையில், “நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று; இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

குடியரசுத்தலைவர் வெளியே;  செங்கோல் உள்ளே: ஆனி ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா, “குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ள வைத்துள்ளது பாஜக அரசு. பெண்க ளின் அனைத்து விதமான உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பெண்கள் எப்போது வேண்டு மானாலும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் நிலை உள்ளது. பெண்களை ஏமாற்றி தான் மத்திய அரசு தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளது. மதச்சார்பற்ற இந்திய நாடாளு மன்றத்தில் ஜெய் ஸ்ரீராம்’ என்ற குரல் கேட்கிறது. பேப்பரில் சர்க்கரை என்று எழுதிவிட்டு அருகில் டீ-யை வைத்து குடித்தால் இனிக்குமா? அதேபோல் தான் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீடும்” என்றார்.

மோடி அரசு தோற்பது உறுதி: பீகார் அமைச்சர் லெஷி சிங்

“பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெண்க ளுக்கு எதுவும் செய்யவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா வால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெண்களை வணங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி தன்னை வணங்கச் சொல்கிறார். வரும் தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது” என்று  பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் லெஷி சிங் கூறினார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் கைது

இராமநாதபுரம், அக்.15- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வ ரம் தங்கச்சிமடம். மண்டபத்தைச் சேர்ந்த  27 மீனவர்களைக் கைது செய்த இலங்கைக்  கடற்படையினர் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 3,000 மீனவர்கள் 650  படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.  கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்த மீன வர்களை இலங்கைக் கடற்படையினர் கைது  செய்தனர். தொடர்ந்து அவர்களது படகு களை இலங்கையின் மன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கடலோர கிரா மங்களில் உள்ள மீனவர்கள், தங்களுக்கு உதவுமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதற்கிடையில் இராமேஸ்வரம் மீன வர்கள் காலவரையற்ற வேலை நிறுத்  தத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. அக்.18-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் மறியல் செய்யப்போவதாக அறி வித்துள்ளனர்.

செங்கம் அருகே விபத்தில் 8 பேர் பலி

திருவண்ணாமலை, அக்.15- செங்கம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூரில் இருந்து திருவண்ணாமலை வழி யாக பெங்களூருக்கு கார் ஒன்று ஞாயிறன்று (அக்.15) காலை சென்றது. செங்கம் அருகே பக்கிரி பாளையம் என்ற இடத்தில் திரு வண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி யும் காரும் நேருக்கு நேருக்கு மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த  மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரி ழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த செங்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் அவர்கள் விபத்து குறித்து காவல்துறையினரிடம் கேட்ட றிந்தனர். இது குறித்து மேல் செங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு இந்த விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல மைச்சர் மு,க ஸ்டாலின், படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அனை வருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார், மேலும், உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ. 2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறும் உத்தர விட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் புகைப்படத்துடன் விளம்பரம் தேடிய பாஜக பெண் நிர்வாகி கைது

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா  மாநிலத்தின் யவத்மால் உமர்காட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வரும் சிறுமி ஒருவர், பள்ளி  முடிந்து வழக்கம்போல் தனது வீட்டுக்கு  தனியே நடந்து சென்றுள்ளார். அப்பொழுது மர்ம  நபர் ஒருவர் அந்த சிறுமியிடம் தான் வீட்டுக்கு  அழைத்துச் சென்று விடுவதாக கூறி இருசக்கர வாக னத்தில் அழைத்து சென்று சிறுமியை வலுக்கட்டா யப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து அந்த  இடத்திலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த  சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக மகளிரணியைச் சேர்ந்த  டாக்டர் சைலி ஷிண்டே என்பவர் சிறுமிக்கு ஆறுதல்  கூறி, சிறுமியுடன் சேர்ந்து புகைப்படமும், வீடியோ வும் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதி வேற்றி, சிறுமிக்கு அனைத்து உதவிகளையும் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக  பரவியது. பாலியல் கொடூரத்தால்  பாதிக்கப்பட்ட சிறுமியின் விவரங்களை பொது வெளியில் பகிர்ந்ததாக பாஜக மகளிரணி நிர்வாகி  சைலி ஷிண்டே மீது  சமூக ஆர்வலர் ஒருவர் போலீ சில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைலி ஷிண்டே மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

மேடற்கொண்டு வருகின்றனர்.  மீண்டும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மோனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓபிசி  பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தின ருக்கு இடஒதுக்கீடு கோரி கடந்த ஆகஸ்ட் மாதம், மராத்தா சமூகத்தின் ஆர்வலர் மோனோஜ் ஜராங்கே ஜல்னா  மாவட்டம் அன்டர்வாலி கிராமத்தில் உண்  ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்  ணாவிரதப் போராட்டம் 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்ததால் செப்.14 அன்று  மோனோஜ் ஜராங்கேவை அப்புறப்  படுத்தி மருத்துவமனையில் சேர்க்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் அவ ருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் இருந்த மராத்தா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, தடி யடி மூலம் உண்ணாவிரதப் போராட்  டத்தை கலைத்தனர். இந்த வன்முறைக்கு  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா (யுடிபி) ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதிக்குப் பிறகு மீண்  டும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மராத்தா சமூ கத்தின் ஆர்வலர் மோனோஜ் ஜராங்கே சனியன்று அறிவித்தார். இந்த அறி விப்பால் ஆளும் பாஜக கூட்டணி அரசு  கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

அண்டார்டிகா பனி அடுக்குகள் உருகும் அளவு  அபாய கட்டத்தை எட்டியது

ரோஸ் தீவு,அக்.15- அண்டார்டிகாவில் கடந்த 25 ஆண்டுகளில் நிலத்தின் மீது படிந்துள்ள நிரந்தர பனி அடுக்குகளில்  40 சதவீத வரை உருகி விட்டதாக  ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் அபாய ஒலி எழுப்பியுள்ளனர். ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி 1997 முதல் 2021 வரை அண்டார்டிகாவில்  162 பனி அடுக்குகளில்  71 அடுக்குகள் உருகிவிட்டன.இதில்   68 அடுக்குகள்  குறிப்பிடத்தக்க அளவு உருகிவிட்டன  எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது சாதாரண நிகழ்வு அல்ல என்றும் , மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் அண்டார்டிகாவை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு  ஆதாரம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். “பெரும்பாலான பனி அடுக்குகள்  விரைவாக  குறுகிய காலத்தில் உருகி, பின்னர் மெதுவாக மீண்டும் பனிபொழிவால் புதிய பனி அடுக்குகள் உருவாகும். தற்போது இந்த பனி அடுக்குகளின் மீண்டும் உருவாக எந்த அறிகுறியும் இல்லாமல், தொடர்ந்து உருகி  வருவதை  நாங்கள் காண்கிறோம்,” என முன்னணி எழுத்தாளர் பெஞ்சமின் டேவிசன் கூறினார். இதே காலகட்டத்தில் லீட்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட  ஆராய்ச்சியில்  உருகிய பனி அடுக்கு களில் 29 அடுக்குகள் மீண்டும் உருவாகிவிட்டதாகவும், 62  அடுக்குகள் மீண்டும் உருவாக்கவில்லை   என்றும் கண்டறிந்துள்ளனர். 25 வருட காலப்பகுதியில் 48 பனி அடுக்குகள்  30 சதவீதத்திற்கும் அதிகமாக தனது அளவை இழந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த பனி அடுக்குகள் உருகுவதற்கு அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் மற்றும் காற்று, பனிப்  பாறைகளின் கீழ் நீரின் வெப்பநிலை உயர்தல் ஆகியவை யும் ஒரு காரணமாக உள்ளது.