states

8 மணி நேரத்தில் குழந்தையை மீட்டெடுத்த காவல்துறை

வேலூர், ஆக.20- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய்க்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பச்சிளம் ஆண்  குழந்தையை கடத்திய 8 மணி நேரத்தில் மீட்டு, கடத்திய பெண் ணையும் கைது செய்தனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுந்தர் மற்றும் சூரியகலா என்ற தம்பதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண்  குழந்தை பிறந்தது. இந்நிலை யில், தாய்க்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து குழந்தையை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, 4 தனிப்படை கள் அமைத்து குழந்தையை தீவிர மாக தேடி வந்தனர். அப்போது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு குழந் தையை வைத்திருந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசா ரணை நடத்தியதில் குழந்தையை  திருடியவர் என்பதும் அவர் ராணிப் பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கம் சேர்ந்த பத்மா என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தது டன் குழந்தை திருட்டில் ஈடுபட்ட பத்மாவை கைது செய்து விசா ரணை செய்து வருகின்றனர். குழந்தை திருடு போன 8 மணி நேரத்தில் காவல்துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோர்களி டம் ஒப்படைத்தனர்.