புதுதில்லி, டிச. 20 - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டு இருந்தது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்ட மிட்டிருந்தது. இதனிடையே, கிறிஸ்துமஸ், மற்றும் ஆங்கில புத்தாண்டு வருவதால் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்ததாகவும், அதனடிப்படையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன் கூட்டியே டிசம்பர் 23-ஆம் தேதி முடித்துக் கொள்ள மக்களவையில் வணிக ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.