சென்னை, நவ. 3 - தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கினாலும் பெரிய அளவில் பெய்யவில்லை. 40 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 4 அன்று தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை யும், கன்னியாகுமரி, தென்காசி, திரு நெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப் பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 5 அன்று நீலகிரி, கோயம்புத் தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளிலும், நவம்பர் 6 அன்று நீலகிரி, கோயம்புத் தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருது நகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட் டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 4 மற்றும் 5 தேதி களில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்தோடு காணப் படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ கத்தில் நவம்பர் 6 வரை மழை தொடரும் என் றும் வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது.