சென்னை, ஆக. 10- மின்சாரத்தின் இருண்ட முகம் என்ற ஆய்வறிக்கையை, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் கள் வழக்காக எடுத்து விசாரித்த னர். பூவுலகின் நண்பர்கள் செவ்வா யன்று “மின்சாரத்தின் இருண்ட முகம்” என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிலத்தடி நீரில் 250 மடங்கு அதிகமான பாதரசம் கலந்திருப்பது அந்த ஆய்வறிக்கை மூலம் வெளி வந்தது. இந்நிலையில் அந்த ஆய்வறிக் கையை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாரா யணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, தாமாக முன்வந்து வியாழனன்று (ஆக. 10) விசாரித்தது. விசாரணையில், இந்த ஆய்வறிக்கை குறித்து அறிக்கை சொல்லும் தரவுகள் தொடர்புடைய அமைப்புகளான என்.எல்.சி. நிர்வா கம், ஒன்றிய, மாநில மாசுகட்டுப் பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைச் செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.