நியூயார்க், அக்.28- இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொது அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 120 நாடு களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் எவ்வளவோ முயன்றும், அமெரிக்கா உள்ளிட்ட வெறும் 14 நாடுகளின் ஆதரவு மட்டுமே கிடைத்ததால், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தீர்மானத்தை இஸ்ரேலால் தடுக்க முடியவில்லை. இதன்மூலம் பாலஸ்தீனத்திற்கு சர்வதேச சமூ கம் மீண்டும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளது. இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற யுத்தத்தை தாங் கள் ஏற்கவில்லை என்ற செய்தியையும் உலகிற்கு வழங்கியுள்ளன.
ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானம்
இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபி மான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத் தைக் கொண்டுவரக் கோரி அரபு நாடுகள் கூட்ட மைப்பின் சார்பில் ஜோர்டான் நாடு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தது. ‘பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனி தாபிமான கடமைகளை கடைப்பிடித்தல்’ எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டு இருந்தது. “மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத் தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; காசா பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை தொடர்ந்து தடையின்றி வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும்; பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கோரும், சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மக்களையும், உடனடியாக நிபந்தனையின்றி விடு விக்க வேண்டும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டி ருந்தது.
வழிமொழிந்த ரஷ்யா உள்ளிட்ட 40 நாடுகள்
இந்த தீர்மானத்தை வழிமொழிந்து ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பி ரிக்கா உள்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்தி ருந்தன. இதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, வழக்கம்போல அமெரிக்காவை அடியொற்றி, இஸ்ரேல், ஆஸ்திரியா, செக் குடி யரசு, ஹங்கேரி, பப்புவா நியூ கினியா, பராகுவே உள்பட 14 நாடுகள் மட்டும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
120 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி
மாறாக, 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் மன்றத்தில், 120 நாடுகள் போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்க ளித்தன. இதனால் ஜோர்டான் நாடு கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தால், பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தப் போவதில்லை என்றாலும், பெரும்பான்மையான நாடுகள் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் யுத் தத்தை ஆதரிக்கவில்லை என்ற செய்தியை உல கிற்கு வழங்கியுள்ளது. பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்த வேண்டும் என்ற ஒரு நெருக்கடி யையும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் மிகமோசமான வகையில் இனப் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகளின் தீர்மானம் கடந்த 20 நாட்களில்- யுத் தத்திற்கு எதிரான முக்கியமான முன்நகர்வாக அமைந்துள்ளது.
போர் நிறுத்த தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா
இவை ஒருபுறமிருக்க, இவ்வளவு காலமும் பாதிக்கப்படும் பாலஸ்தீனம் பக்கம் இருந்த ‘இந்தியா’, ஜோர்டான் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பை புறக்கணித்தது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா இடையே யுத்தம் மூண்ட அன்றே, பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரி வித்தார். இது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்ற நிலையில், வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தலையிட்டு விளக்கம் அளித்தார். பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோச மடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் முக மது அப்பாசுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டதாகவும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் இந்தியா வின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டையே தொடர்வதாக பிரதமர் மோடி, அப்பாசிடம் தெரி வித்ததாகவும் சமாளித்தார். ஆனால், ஹமாஸ் அமைப்பைக் காரணம் காட்டி காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் யுத்தத்தை உட னடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி யும், அதேநேரம் இஸ்ரேலின் பெயரை வெளிப்படை யாக குறிப்பிடாமல், ‘பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை கடைப் பிடித்தல்’ தலைப்பில் ஜோர்டான் நாடு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல், அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய சறுக்கல்
இது, இவ்வளவு காலமும் இந்தியா கடைப் பிடித்த வெளியுறவுக் கொள்கையில் மோசமான சறுக்கலாக அமைந்துள்ளது. பாலஸ்தீனம் ஒரு நாடு என்கிற தகுதி பெறு வதற்கு முன்பே பாலஸ்தீன தூதரை அங்கீகரித்த நாடு இந்தியா. பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ், ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து என்பதுபோல் பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கு சொந்தமானது என்று இந்திய நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தி உறுதியான ஆதரவை பாலஸ்தீன மக்க ளுக்கு வழங்கினார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேரு துவங்கி மன்மோகன் சிங் வரை தங்களின் ஆதரவை பாலஸ்தீனத்திற்கு வழங்கி வந்துள்ளனர். வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது, இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டினாலும், பாலஸ்தீனத்திற்கான ஆதரவை கைவிடவில்லை. ஐ.நா. மன்றங்களில் இஸ்ரே லுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வுமே இந்தியா இதுவரை வாக்களித்து வந்தது. இந்தியா மட்டுமன்றி, ஆஸ்திரே லியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்க ணித்தன.
காரணத்தைக் கூறாத இந்திய பிரதிநிதி
தீர்மானத்தின் மீதான உரை யின்போது ஐ.நா.வுக்கான இந்தியா வின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல், “காசாவில் நடந்து வரும் தீவிரமான போரில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் கவ லைக்குரியது. குடிமக்கள், குறிப் பாக பெண்கள் மற்றும் குழந்தை கள் உயிரிழக்கின்றனர்; பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதி லும், நடந்து வரும் போரில் பொது மக்களின் உயிர் இழப்புகள் குறித் தும் இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது; அந்தப் பிராந்தி யத்தில் போர்கள் அதிகரிப்பது மனி தாபிமான நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தும்” என்றெல்லாம் பேசியுள்ளார். “அனைத்துத் தரப்பி னரும் தங்களது பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும்” எனவும் உபதேசம் வழங்கியுள்ளார். எனினும், போர் நிறுத்தத் தீர்மா னத்திற்கு ஆதரவாக உண்மையில் இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்று அவர் கூறவில்லை.
ஹமாசிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு
இவ்வாறு இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான - போர் நிறுத்தத் தீர்மா னத்தை ஆதரிக்காத இந்தியா, இஸ்ரேலின் தாக்குதலை நிராக ரித்துவிட்டு ஹமாஸை மட்டும் கண்டிக்கும் வகையில் தீர்மா னத்தில் கனடா கொண்டு வந்த திருத் தத்தை இந்தியா ஆதரித்து வாக்க ளித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு 88 நாடு கள் ஆதரவாகவும், 55 நாடுகள் எதி ராகவும் வாக்களித்தன. 23 நாடுகள் வாக்களிக்கவில்லை. எனினும் மூன்றில் இரண்டு பங்கு வாக்கு களை பெறாததால் ஹமாசிற்கு எதி ரான இந்த தீர்மானம் தோற்றுப் போனது.