புதுதில்லி, ஆக. 9 - டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, கடந்த ஆகஸ்ட் 7 அன்று மக்கள வையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலை யில், புதனன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது. மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாது காப்பு மசோதா ஒன்றிய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது. தனிநபர்களின் தரவுகளை தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படும். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த நேரத்தில், ஆகஸ்ட் 7 அன்று மக்க ளவையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாது காப்பு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. அப்போது பேசிய ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்ட பிறகே, இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒரு நபரின் தரவு நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்; எதற்காக வாங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தும் நிறு வனங்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும்” என்று கூறினார். இந்த மசோதா குறித்து, அவையில் எதிர்க்கட்சி கள் விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று போலிக் கவலையை வெளிப்படுத்தினார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையிலும் புதனன்று (ஆக. 9) டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. முன்னதாக டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவிப்பதாக எதிர்க்கட்சிகள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி வெளிநடப்பும் செய்தனர்.