states

காவிரி நதிநீர்... என்ன நடக்கும்?

தமிழகம் - கர்நாடகம் இடையி லான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரம் வழக்கம்போல நிகழாண்டும் தொடர்வது கவலை யளிக்கிறது. குறிப்பாக காவிரியில் விநா டிக்கு 24,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்காமல் வெறும் 5,000 கனஅடி நீர் மட்டும்  அடுத்த 15 நாள்களுக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்ததும், அதை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதும் ஏற்க முடியாதது மட்டுமன்று, குறுவை சாகுபடியைத் தொடங்கி நீருக்காக காத்திருக்கும் டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.  காவிரி நதிநீர் தீர்ப்பாயம் 5.2.2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றியமை த்து 16.2.2018-இல் பிறப்பித்த உத்தர வின்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு  ஆகியவை அமைக்கப்பட்டன. கர்நாட கம் மாதந்தோறும் காவிரியில் தமிழ கத்துக்குத் திறந்துவிட வேண்டிய பங்கீட்டு நீரை உறுதிப்படுத்துவதுதான் இவற்றின் பணி. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் ஜனவரி மாதம்  வரையிலான காலத்தில் பிலிகுண்டுலு பகுதியில் தமிழகத்துக்கு திறந்துவிடப் படும் நீரின் அளவு கணக்கிடப்பட்டு வருகிறது. 

கடந்த மாதத்துக்கான நதிநீர் பங்கீட்டின்படி, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஆக.10-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில், பிலிகுண்டுலு நீர் அளவைப் பகுதி யில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள் களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி  நீர் திறந்துவிட வேண்டும் எனப் பரிந்து ரை செய்யப்பட்டது. ஆனால், இந்த நீர் அளவு தில்லியில் ஆகஸ்ட் 11-ஆம்  தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் கேட்டுக் கொண்டதன்பேரில் விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.  இதுதான் நிகழாண்டு காவிரி பிரச்சனையைத் தீவிரமாக்கி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ஆம் தேதி புதிய மனு தாக்கல் செய்ய  வித்திட்டது. கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி  அணைகளில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நில வரப்படி அவற்றின் மொத்த இருப்புக் கொள்ளளவான 114.671 டிஎம்சியில் 93.535 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, பிலிகுண்டுலுவிலிருந்து 24 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பது தமிழக அரசுத் தரப்பின் வாதமாக உள்ளது. 

ஆனால், தென்மேற்குப் பருவ மழைப் பற்றாக்குறையால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்புக் குறைவு, குடிநீர்த் தேவை போன்ற வற்றைக் கருத்தில் கொண்டு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்க முடியும் என்பது கர்நாடக அரசுத் தரப்பின் வாதமாக இருந்தது.  கர்நாடக அரசு அளித்த தரவுகளின் படி, காவிரி ஒழுங்காற்றுக் குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வர த்தின்படி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி 42.54 சதவீதமும், ஆகஸ்ட் 27-ஆம் தேதி 51.22 சதவீதமும் நீர்வரத்துப் பற்றாக்குறை என ஒழுங்காற்றுக் குழு கணக்கிட்டது. இதன் அடிப்படை யிலாவது விநாடிக்கு 14,200 கனஅடி தண்ணீரை வழங்க வேண்டும் என்கிற தமிழகத்தின் கோரிக்கையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இறுதியில், ஒழுங் காற்றுக் குழு பரிந்துரையின்படி 15  நாள்களுக்கு (ஆக. 29- செப். 12) பிலி குண்டுலுவுக்கு விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வருவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் உத்தரவிட்டார். 

டெல்டா பாசன விவசாயத்துக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப் பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது ஆக. 30-ஆம் தேதி நிலவரப்படி நீர் மட்டம் 51 அடியாகக் குறைந்துவிட்டது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாகச் சென்றடையவில்லை. இதனால், நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. குறிப்பாக தஞ்சையில் 2 ஆயிரம் ஏக்கரும், நாகையில் 13 ஆயிரம் ஏக்க ரும், திருவாரூரில் 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் முழுமையாக கருகிவிட்டன. இது போக போக இன்னும் அதிகரிக்கலாம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்காக 5.20 லட்சம் ஏக்கரை தமிழக  வேளாண் துறை நிர்ணயித்தது. இதற் காக குறுவை சிறப்புத் தொகுப்பு திட்ட மும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தண்ணீர்ப் பற்றாக்குறை அபாயம் கருதி, இதில் சுமார் பாதியளவு க்கே டெல்டாவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடக அர சியல் கட்சிகள் கூறுவதுபோல டெல்டா வில் பாசனப் பரப்பை தமிழக அரசு  அதிகரித்திருக்கிறது என்பது உண்மை யில்லை என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம். 

காவிரி பிரச்சனையைப் பொறுத்த வரை கர்நாடகத்தில் ஆட்சி மாறினா லும் காட்சி மாறவில்லை என்பதே எதா ர்த்த நிலையாக உள்ளது. தமிழ்நாடு அதிமுக, மத்திய பாஜக அரசோடு கூட்டணியிலிருந்தும் காவிரி நீர் பிரச்ச னைக்கு சுமூக தீர்வை எட்டுவதற்கு பாஜக அரசுக்கு ஏன் அழுத்தம் தர வில்லை. அதேபோல் 5 ஆயிரம் கன  அடி நீர் திறப்பதற்கு அங்குள்ள பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள் ளது. இதுகுறித்தெல்லாம் அதிமுக வின் எடப்பாடியும், பாஜக அண்ணா மலையும் என்ன சொல்லப்போகிறார் கள்? இது இன்று சாதாரண மக்களிடை யே எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, மேலாண் மை ஆணையம் என இத்தனையை யும் தாண்டி அனைத்துக் கட்சிக் குழு வை அமைத்து பிரதமரைச் சந்தித்து முறையிடுவது என கர்நாடக அரசு தீர்மானித்திருக்கிறது. தமிழக அரசும் அதுபோன்று அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பிரதமரைச் சந்தித்து முறையிடும் வாய்ப்பை முன்னெடுக்க வேண்டும் என்று விவ சாயிகள் விரும்புகின்றனர்.  என்னதான் முயற்சி எடுத்தாலும் அதைப்பற்றி பிரதமர் கவலைப்பட போவதில்லை என்ற விவாதமும் பொதுவெளியில் எழுந்து வருகிறது. இந்த பின்னணியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது எனவும், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் சட்டப் போரா ட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும் தொடர்வதைத் தவிர வேறு வழி யிருப்பதாகத் தெரியவில்லை.

- ஐ.வி.நாகராஜன்