states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரளாவின் பிரபல சுற்றுலாத்தலமான வாக மனின் எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் ரூ.3 கோடி செல வில் 40 மீட்டர் நீளமுடைய இந்தியாவின் மிக நீள மான கண்ணாடி பாலத்தை அம்மாநில சுற்று லாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்து வமனைக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் ரூ.60  லட்சம் வழங்கினார் காவேரி கலாநிதி மாறன்.

சென்னை ஸ்ரீபெரும்புத்தூர் அருகே நாட்டு  வெடிகுண்டு வீசி ரவுடி எபிநேசர் (25)  கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர்  கிருஷ்ண கிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2,134 கோடி  வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 28,102 புதிய  தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ள னர் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் செப்டம்பர் 18 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கான விநாயகர் சதுர்த்தி விடு முறை செப்டம்பர் 17இல் இருந்து 18 அன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான திமோர்-லெஸ்டேவின் தலைநகர் தில்லியில், இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கோவாவின் புறநகர் பகுதியான போர்வோரம் கடற்கரை பகுதியில் சுனாமி பற்றி எச்சரிக்கை கொடுக்கும் சைரன்  புதனன்று 9 மணியளவில் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள், கடை வைத்திருக்கும் பொதுமக்கள் அலறியடித்து கடற்கரையை விட்டு ஓடினர். போர்வோரம் மட்டு மின்றி அடுத்த 2 மணிநேரத்தில் சுனாமி எச்சரிக்கை யால் கோவா மாநிலமே பரபரப்பால் ஆட்டம் கண்டது. அதன்பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனாமி எச்சரிக்கை ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் சூறாவளி புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரி ழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பெருநகரில் கடந்த 9 நாட்களில் 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.