states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்ச்சி நிரலே, பிரதமர் மோடியின் அதீத பொய் பிம்பத்தை முன்னிறுத்துவதும், தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதாவை சட்டமாக்குவதும்தான் எனக் கூறப்பட்டுள்ளது. பிரதமர்/மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்/ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்வுசெய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை, மோடி அரசின் மசோதா மீறுகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கேபினட் அமைச்சரை நியமித்து, தேர்தல் ஆணையத்தின் மீது அரசாங்கத்தின் பிடியை இறுக்குகிறது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீட்டெடுக்கும் வகையில், இந்த மசோதா ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளால் தோற்கடிக்கப்பட வேண்டும்.