states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

100 நாள் வேலை:  மாற்றுத்திறனாளிகளுக்கு புது உத்தரவு

சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுக்காப் போர் உரிமைகளுக்கான சங்கம் மே 17 ஆம் தேதி  நடத்திய  போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள் ளது. ஊரக வளர்ச்சி இயக்குநர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் புதிய உத்தரவில் கூறியிருப்பது வருமாறு:- மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள்  வேலை வழங்க மறுக்கக் கூடாது. வேலை அட்டை மற்றும் வேலை வழங்கு வது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளது குறைகளை தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதி மாதம் 2-வது செவ்வாயும், ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குநர் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் சிறப்பு குறைதீர் கூட்டம்  நடத்தவும் வேண்டும் உள்ளிட்ட 7 புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிதாக உத்தரவு பிறப்பித்திருக் கும் ஊரக வளர்ச்சி உயர் அதிகாரிக ளுக்கும் அரசுக்கும் மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

நகைக்கடன் தள்ளுபடி திட்டம் முழுமையாக நிறைவேற்றம்

சென்னை, ஜூன் 9- திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்து,  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி  செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுந்த பயனாளர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கட்டமாக நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், கூட்டுறவு  வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்  பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள்  முழுமையாக தள்ளுபடி செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 விழுக்காடு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுற வுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்

சென்னை, ஜூன் 9- அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தில் வருகிற 27 ஆம் தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:- வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற  முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 27 ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும். மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் 25 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை  நாட்களாகும். அதனால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு இருக் கும். வங்கி பணிகள் பாதிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

‘வாட் வரி’யை குறைக்கச் சொல்கிறார் சக்திகாந்த தாஸ்!

“நடப்பு நிதியாண்டிலும் பணவீக்க ஆபத்து தொடர்கிறது. அது 6.7 சதவிகிதமாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் மட்டுமே பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு உள்ளது” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டிருந்தார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வில் ஒன்றிய அரசு விதிக்கும் கலால் வரிக்கே அதிகபங்கு உள்ளது. எனினும், அதனைக் குறைக்க வேண்டும் என்று சக்திகாந்த வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. மாறாக, “பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசுகளின் ‘வாட் வரி’யை மேலும் குறைப்பது பணவீக்க அழுத்தங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை மென்மையாக்குவதற்கு நிச்சயமாக பங்களிக்கும்” என்று பேசியுள்ளார்.

அமித்ஷா போல் சோனியா, ராகுல் ஒடி ஒளியமாட்டார்கள்!

“நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல்  காந்தி ஆகியோர் விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராவார்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார். “எங்களிடம் (காங்கிரசிடம்) மறைக்க எதுவும் இல்லை. நாங்கள் அவர்களை (பாஜகவினரை) போல் இல்லை. 2022 முதல்  2013 வரை அமித் ஷா ஒடியது எங்களுக்கு நினைவிருக்கிறது. சத்தியத்தின் பாதையை கடைப்பிடிப்ப வர்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு அவர்கள் எங்களிடம் இருந்து சில பாடங்களை கற்றுக் கொள்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்கொய்தாவையும் மத்திய கிழக்கு நாடுகள் கண்டிக்க வேண்டும்!

“பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர், முகம்மது நபிகளை இழிவுபடுத்திய விவகாரத்தில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான்,  பக்ரைன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அதே போல, இந்தியாவுக்கு எதிரான அல்கொய்தா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்களையும் மத்திய கிழக்கு நாடுகள் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்” என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். நுபுர் சர்மா பேச்சுக்கு பிரியங்கா சதுர்வேதி ஏற்கெனவே தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.

பதற்றங்கள் தணிந்ததும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்!

இந்தியாவில் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்நிலை யில், “தற்போதைய பணவீக்க உயர்வு தற்காலிகமானதுதான்” என்றும், “எதிர்கால வளர்ச்சியை  மட்டுமே நாம் உற்றுநோக்க வேண்டும்” என்றும் ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். “உலக பொருளா தாரக் கொள்கைகள், போர், அரசியல் செயல்பாடு உள்ளிட்டவற்றிலிருந்து இந்தியா தற்போது சவால்களை எதிர்கொண்டுள்ளது. பதற்றங்கள் தணிந்து சாதகமான அம்சங்கள் தென்படும் நிலையில் இந்திய பொருளாதரத்தின் வளர்ச்சி வேகம் கவனிக்கத்தக்க அளவு அதிகரிக்கும்” என்றும் அவர் சமாளித்துள்ளார்.