states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக மோடி அரசு கூறி வரும் கற்பனைக் கதையின் உண்மை முகம் என்ன வென்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்துகிறது.  இந்தியாவில் கோவிட்டுக்குப் பிறகு வேலையின்மை மிக மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. 25 வயதிற்கு உட்பட்ட பட்டதாரிகளிடையே வேலையின்மை 42  சதவீதமாக மிகப்பெரிய அளவிற்கு உச்சத்தை  தொட்டுள்ளது. பள்ளிக்கல்வி முடித்தவர்களி டையே வேலையின்மை 21.4சதவீதம், 10ஆம் வகுப்பு முடித்தவர்களிடையே வேலையின்மை 18.1சதவீதம், நடுநிலைப்பள்ளி முடித்தவர்களிடை யே 15சதவீதம் என வேலையின்மை மோடி ஆட்சியில் ஆட்டம் போடுகிறது. மாறாக மோடி அரசின் கூட்டுக்களவாணிகளது செல்வம் தான் மேலும் மேலும் தீவிர வளர்ச்சி பெற்று வருகிறது.