states

அநீதி நடக்கும் போது அமைதி காத்த மோடியும், அமித்ஷாவும் குற்றவாளிகள் - - கே.பாலகிருஷ்ணன், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாண மாக இழுத்துச் சென்ற சம்பவம் இணையச்  சேவை முடக்கப்பட்டதால் இரண்டரை மாதங்கள் கழித்தே வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், நடந்துள்ள சம்பவம் அந்த மாநில முதல்  வர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு முன்னதாகவே தெரியும். மே 18 அன்று முதல் தவகல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பிறகு எப்படி  இவர்களுக்குத் தெரியாமல் இருக்கும்? ஒன்றரை மாதத்திற்கு முன்பாக உள்துறை  அமைச்சர் அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் ஏன் வாய்திறக்க வில்லை? அந்த மாநில முதல்வர் ஏன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக் காத மாநில முதல்வர் மீது ஒன்றிய அரசு ஏன் நட வடிக்கை எடுக்கவில்லை? இதில் முழு முதல் குற்ற வாளிகள் அம்மாநில முதல்வர், ஒன்றிய உள்துறை  அமைச்சர், பிரதமர் ஆகியோர்தான். இவர்கள்தான் தங்களது இன வெறி அரசிய லுக்காக மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலம்  பற்றி எறிந்த போதும் அமைதி காத்தனர். அநீதி  நடக்கும் போது அமைதியாக இருப்பதும் அநீதி தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள்  இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்

கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்துன.