மதுரை,ஏப்.22- பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூரில் தையல் கடை நடத்தியவர் ராஜீவ் காந்தி. இவர், தையல் பயிற்சி பெற வந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை யில் ஈடுபட்டார். இதுதொடர்பாக ராஜீவ் காந்தியை மாத்தூர் காவல்துறை யினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், ராஜீவ் காந்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயுள் சிறைத் தண்ட னையும் விதித்தது. தண்டனையை ரத்து செய்யக் கோரி ராஜீவ் காந்தி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணி யன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசா ரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சிவசுப்பிரமணியம் வாதிட்டார்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , தமிழகத்தில் பாலியல் வழக்குகளில் பெண்களுக்கு இரு விரல் பரிசோதனைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ள தாக கருதுகிறோம். பாலியல் வழக்கு களில் குறிப்பாக இளம் வயதினர் சம் பந்தப்பட்ட பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை அமலில் உள்ளது. இந்த சோதனை தனியுரிமை மீறல் என 2013-ல் உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. பல்வேறு உயர் நீதிமன்றங் களும் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, இரு விரல் பரிசோதனை தொடர்வ தை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உடனடியாக இரு விரல் பரி சோதனைக்கு தடை விதிக்க வேண்டும்.இந்த வழக்கை பொறுத்தவரை பாலியல் குற்றத்துக்காக மனுதார ருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனை, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாக மாற்றப்படு கிறது. சிறுமியை கடத்தியது தொடர்பாக வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.