states

மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை: அடுத்த மாதம் ஒத்திவைப்பு

விழுப்புரம், ஆக.22- கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறை யில் இறந்தார். இதனைத் தொடர்ந்து  வன்முறை வெடித்தது. இந்த  வழக்கை சிபிசிஐடி காவல்துறையி னர் விசாரித்து வருகின்றனர். மாணவி ஸ்ரீமதி வழக்கு விசா ரணை விழுப்புரம் மாவட்ட குற்றவி யல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த  மாதம் 19 ஆம் தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதை படித்து பார்க்க அவகாசம் வேண் டும் என ஸ்ரீமதியின் தாய் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த  வழக்கை ஒத்திவைத்து உத்தர விட்டார். அதன்படி வழக்கு செவ்வா யன்று (ஆக.22) விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதியின் தாய் சார்பில்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் கஜேந்திரன், விழுப்புரம் வழக்கறிஞர்கள் லூசியா, கேசவன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள், மாணவி ஸ்ரீமதி வழக்கு  விசாரணை சிறப்பு புலனாய்வை ஓய்வுபெற்ற நீதிபதி நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். மேலும் குற்றப்பத்திரிகை தொடர்பாக சில ஆவணங்களை சரி பார்க்க வேண்டி உள்ளது. எனவே,  விசாரணையை ஒத்தி வைக்க  வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசா ரணையை அடுத்த மாதம் (செப்டம்  பர்) 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.