states

தமிழக அரசு பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

சென்னை, ஆக.21- தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழி யர்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமனம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வு கள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கிய பணியாகும். டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவும், 10 உறுப்பினர் கள் பதவிகளுக்கான பெயர்களை யும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு  பரிந்துரை பட்டியல் அனுப்பியது. பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலை வர் மற்றும் உறுப்பினர் பணி யிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். இந்நிலையில், தமிழ்நாடு  அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர்  நிறுத்தி வைத்துள்ளார். ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில்  அளித்த பிறகு ஒப்புதல் அளிக்காமல்  இழுத்தடிப்பு செய்து வருகிறார்.