33 பொருட்கள் அடங்கிய கலைஞர் கிட்’ ஒப்பந்தப் புள்ளி கோரியது அரசு
சென்னை, அக்.20- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது துறையின் மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டி ருந்தார். அதில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பிக்கும் வகையில் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42 கோடி செலவில் விளையாட்டு உபக ரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து ஊராட்சிகளிலும் கிராமப்புற இளைஞர்கள், விளை யாட்டின் மீது அதீத ஆர்வம் உடை யவர்கள். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலா னவர்களிடம் தேவையான விளை யாட்டு உபகரணங்கள் இருப்ப தில்லை. எனவே கருணாநிதி நூற்றாண்டு பொன்விழா ஆண்டான 2023-ல் மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் அனைவருக் கும் பயனளிக்கும் வகையில் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்” கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும், ரூ.42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு செயல் வடி வம் கொடுக்கும் வகையில் 33 விளையாட்டு பொருட்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு கிட் விரைவில் வழங்க இப்போது ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னை, அக்.20- சென்னையில் ஆபரணத் தங்கத் தின் விலை வெள்ளியன்று (அக்.20) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந் துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வியாழனன்று (அக்.19) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.25 (அக்.20) சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்
சென்னை,அக்.20- நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகியது. தமிழ்நாட்டில் வரும் 22 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்ட லத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை அக்.19 ஆம் தேதி விலகி யுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 35 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 8 விழுக்காடு அதிகம். சென்னைக்கு 77 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 74 விழுக்காடு அதிகமாகும். இந்நிலையில், வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த கால கட்டத்தில் வழக்கமாக பெய்யும் அள வில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிற்கு 44 செ.மீ. மழை கிடைக்கும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். உருவானது காற்றழுத்த தாழ்வு இது சனிக்கிழமை (அக். 21) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதி களில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வட கிழக்கு பருவமழை தொடக்க நிலை யில் வலு குறைந்து காணப்படும். குமரிக்கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் சில இடங்களில், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 22, 23 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச் சேரி மாநிலத்தில் சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.21) மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.