2020ம் ஆண்டிலிருந்து ஆசிரியர் நிய மனமே இல்லாமல் கௌரவ விரிவுரை யாளர்களை பணியில் அமர்த்திதான் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் செயல்பட்டுவந்தன. 250க்கும் மேலான பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். அறக்கட்டளை இடைக்கால நிர்வாகியாக மேனாள் நீதிபதி சந்துரு அவர்களின் உத்தரவின் பேரில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. சேஷன் நிய மிக்கப்பட்ட போது காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற உத்தரவையும் அந்த தீர்ப்பில் வழங்கி னார். சேஷன் காலிப்பணியிடங்கள் நிரப்ப முயற்சித்த போது அவர் அந்தப் பணியை செய்யவிடாமல் தடுத்து நீதிமன்றம் சென்று தேர்தலை மட்டுமே நடத்தினால் போதும் என்ற உத்தரவை பெற உதவி புரிந்த பினாமி களான ஆசிரியர்கள்தான் இன்று தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனம் என கூக்குரலிட்டு வருகின்றனர். பினாமிகளால் சிலர் ஆசிரிய நியமனமும் பெற்று விட்டனர். 2018ல் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப் பட்ட முன்னாள் நீதிபதி திரு சண்முகம் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் எந்த ஒரு வழிகாட்டுதலும் வழங்கவில்லை.
ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் ஊரடங்கில் இருந்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ், இடைநீக்கம், பணிநீக்கம் என அடுத்தடுத்து ஆசிரியர் களை விளக்கம் அளிக்க கல்லூரிக்கு வரச் சொல்லி இடைக்கால நிர்வாகியால் படாதபாடுபடுத்தப்பட்டனர் ஆசிரியர்கள். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கடுமையான முயற்சிகளால் உயர்கல்வித்துறை இயக்குநர், இணை இயக்குநர் மூலம் உத்தரவை பெற்று உயர்நீதி மன்ற மூலமும் கைவிட உத்தரவை (kept in abeyance) பெற்று அந்த முயற்சி தடுக்கப்பட்டது. தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எல்.சி. திருமலை என்பவர் எவ்வித விசாரணையும் இன்றி இயக்குநர், இணை இயக்குநரின் முன் அனுமதியும் இன்றி 2019ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். இணை இயக்குநர் அந்த ஆணையை ரத்து செய்து பணியில் அமர்த்த பலமுறை உத்தரவிட்டும் இன்றள வும் அவரை பணியில் சேரவிடாமல் தடுத்து வருகின்றனர். அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை பச்சையப்பன், செல்லம்மாள், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிகள்) அறங்காவ லர்களின் ஊழலோடு இணைத்து நீதிமன்றத்தின் மூலம் பதவியிழக்கச் செய்தனர் இடைக்கால நிர்வாகி திரு. சண்முகம் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்ப தால் இன்றளவும் கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் களே பணியில் இருந்து வருகின்றனர்.
அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கும் இடைக்கால நிர்வாகி ஓய்வுபெற்ற நீதிபதி திரு. சண்முகம் அவர்களுக்குமான வழக்கில், இடைக்கால நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த தால் அறக்கட்டளை நிர்வாகம் சொத்தாட்சியர் (AGOT) வசம் வந்தது. (2021ஆண்டு சொத்தாட்சியர் அவருக்கு உதவி புரிய செயலாளராக திரு. துரைக் கண்ணுவை நியமித்தார். இதுவரை செயலராக செயல்பட்டு வந்த (இடைக்கால நிர்வாகியால் நியமிக்கப் பட்டவர்) செல்வி. அறச்செல்வி துரைக்கண்ணு வின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் சென்றுள் ளார். வழக்கு நிலுவையில் உள்ளது துரைக்கண்ணு விற்கு கல்லூரி கல்வி இயக்குநரால் வழங்கப்பட்ட ஒப்புதல் அனைத்திலும் இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் என குறிப்பிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சம்பளம் பெற்று வரும் இவர்தான் ஆசிரியர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் கூறி ஆசிரியர்களின் பணி மேம்பாடு கோப்பு களை கல்லூரி கல்வி இணை இயக்குநர் உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்ட போதும் கூட கையெழுத்திட்டு அதை அனுப்ப மறுக்கிறார் அறக்கட்டளையின் செயலர். துரைக்கண்ணு நெய்வேலி லிக்கனைட் கார்ப்பரேச னில் பொறியாளராக பணியாற்றியவர். அவரை தூத்துக் குடிக்கு இடமாற்றம் செய்த போது எதிர்த்து போராடி மீண்டும் நெய்வேலியில் பணியமர்த்தப்பட்டவர். ஓய்வு க்குப் பின் முற்றிலும் தனக்கு சம்பந்தமில்லாத கல்வி நிலையம் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகத்தில் சொத்தாட்சியரின் செயலாளராக பொறுப்பேற்றவர் இன்று கல்லூரி கல்வி முகமையின் செயலாளராக தன்னை எண்ணிக் கொண்டு கல்லூரி ஆசிரியர் அலுவலரை கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றார். அவற்றில் சில-
ஆராய்ச்சி மாணவர்களோடு நிலை 1 கல்லூரியில் பணிபுரிந்தவர்களை நிலை 2 கல்லூரிகளுக்கு பணி மாற்றம் செய்து ஆராய்ச்சி மாணவர்களை திண்டாட்டத் தில் விட்ட இவர்கள் மாணவர்களின் நலன் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. 2014ம் தான் ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. பணியில் மூத்த ஆசிரியர்கள் துறையில் மிகக்குறைவாகவே உள்ள னர். பணியில் மூத்த ஆசிரியர் அலுவலர்களை பணி மாற்றம் செய்வது அவர்கள் நீதிமன்றம் சென்று தடை யாணை பெற்று வந்தால் அந்த வழக்கை காரணம் காட்டி கல்லூரிக் குழு, ஆட்சிக்குழு கூட்டத்திற்கு அவர்களை அழைக்காமல் பணியில் இளையவரை வைத்து கூட்டம் நடத்தி முன்னரே அறிவிக்காத பல்வேறு பொருள்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி அவர்களி டம் கையெழுத்து பெற்றுவிடுவது நிலை 1ல் உள்ள கல்லூரியில் துறைத் தலைவராக உள்ள ஆசிரியரை துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து இறக்க ஒரே ஒரு பணி மூத்த ஆசிரியர் உள்ள நிலை 2 கல்லூரியி லிருந்து மாணவர் நலன் துறை நலன் பற்றி எதுவும் சிந்திக்காமல் அவரை இடமாற்றம் செய்து 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவரை துறைத் தலைவராக்கி அவரால் மாணவரும் ஆசிரியரும் படும் துயரம் சொல்லவொண்ணாதது. கௌரவ ஆசிரியர்கள் அவரிடம் படும் பாட்டை சொல்லக்கூடாது. சொன்னால் அவருக்கு வேலை இல்லை என கௌரவ ஆசிரி யரை மிரட்டி அனுப்புவது. ஆட்சிக்குழு கூட்டத்தில் கல்வி முகமையாக செயல்படுவது கல்லூரிக்குச் சென்று முதல்வர் இருக்கையில் அமர்வது. பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவரின் பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு செல்லும் விடுதி பணத்தில் ஊழல் நடந்திருப்பதாக பொய்யுரைத்து அப்போது முதல்வராக இருந்த ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிப்பது (சம்பந்தப்பட்ட ஆசிரியர் கேட்கும் விபரங்களை தர மறுப்பது) மாணவர் ஆசிரியர் விளக்க மளித்தும் ஏற்க மறுப்பது.
ஆசிரியர்களை எப்ஐஆர், சிபிசிஐடி என நாள்தோறும் பயமுறுத்தி காவல்நிலையம், நீதிமன்றம் என அலைக்கழித்து கொண்டிருப்பது கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர்களை தரக்குறை வாக நடத்துவது, பேசுவது, முட்டாள்கள் என பிறரிடம் குறிப்பிடுவது சாதிய ரீதியாக ஆசிரியர்கள் இருப்ப தாக கூறிக்கொண்டு இவரே சாதி சார்ந்து செயல்படு வது தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம் (1976) விதி களை முற்றிலும் புறக்கணித்து காற்றில் பறக்க விடுவது நேரடியாக ஆசிரியர் அலுவலர்களை (முதல்வரை ஓரங்கட்டி) தொலைபேசியில் தொடர்பு கொள்வது தொலைபேசியில் அழைத்து முதல்வர், ஆசிரியர் அலுவலரை மிரட்டுவது என செயலர் துரைக்கண்ணுவால் கல்லூரிச் சூழல் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது சொத்தாட்சியர் அறிவுரைப் படியே தான் செயல்படு வதாக அவரே சொல்லி கொண்டிருக்கிறார். சொத்தாட்சி யரோ ஆசிரியர், அலுவலர் சங்கப் பொறுப்பாளர்கள் யார் வந்தாலும் செயலரை சந்தித்து கடிதம் தரச்சொல்கிறார். பணிமாற்றம் செய்யப்பட்ட ஒருவரின் ஆராய்ச்சி மாணவர்கள் பரிதவிக்கிறார்கள் என்பதால் அவரை மீண்டும் அவர் பணியாற்றிய கல்லூரிக்கு மாணவர் நலன் கருதி அனுப்பிட பணிமாற்ற ஆணையை இரத்து செய்ய வேண்டினால் சங்கத் தலைவர்களிடம் அவர் படிப்பு முழுவதும் தொலைதூரக் கல்வி படிப்பு. அவரால் மாணவர் தான் பாதிக்கப்படுவார் என இவர்களே விசார ணையின்றி தீர்ப்பு எழுதுகிறார்கள். உண்மையில் அவர் அரசு கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் ஆராய்ச்சி படிப்பு வரை நேரடி வகுப்புக்கு சென்று படித்த வர் இதரை சொல்வதற்கு கூட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
சொத்தாட்சியர் ஆசிரியர்களை சந்திக்க மறுக்கிறார் செயலரை சந்திக்கச் சொல்கிறார். செயலரோ அதிக வேலை இருப்பதாக அலைக்கழிக்கிறார். அப்படியே சந்தித்தாலும் தவறான செய்திகளை சொல்லி குழப்பி அனுப்புவது அல்லது மிரட்டி அனுப்புவது என்ற பாணியை கடைபிடிக்கிறார். நியாயம் வேண்டி போராட்டம் என அறிவித்தால் யாரும் போராடக் கூடாது. போராட்டத்தில் இறங்கக் கூடாது என முதல்வர்களை மிரட்டி அனைத்து ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துள்ளார். இதைப் பற்றியெல்லாம் கவனம் செலுத்தாமல் கல்லூரி, பள்ளிகளின் கல்விச்சூழலை பாழடித்து கொண்டு, ஜனநாயக முறையில் கேட்கும் கேள்வி களுக்கும், போராட்டங்களும் இல்லாமல் செய்வதற்கு 2014-16ல் நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காதவர் களை வழக்கு போடவைத்து அதையே காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை. தொலைதூரக் கல்வி யில் படித்தவர்கள் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்துவதற்கு வந்த இவர்கள் தேர்தலை நடத்தா மல் காலம் கடத்துவதற்கு வழிவகை செய்யவே மூன்று பேர் கொண்ட குழுவை இவர்களே நியமித்து ஆசி ரியர் சான்றிதழை சரி பார்க்கிறோம் என்று கூறுவது. ஜனநாயகத்தின் அனைத்து குரல்வளையும் நெரித்து பயத்திலேயே ஆசிரியர்களை மிரட்டி வைத்து கல்விச்சூழலை பாழடித்து வரும் இவர்களிடமிருந்து கல்வி நிலையங்களை மேலும் அரசு மீட்டெடுக்க வேண்டும். தமிழக முதல்வர், இந்த அரசு உடனடியாக நீதிமன்றம் வலியுறுத்திய 14-A தனி அலுவலரை நிய மித்து (கல்வி முகமை இல்லாத காரணத்தினால்) கல்வி நிலையங்களை பாதுகாக்க முன் வர வேண்டும்.
கட்டுரையாளர் : பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர்.