states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தங்கம் விலை தொடர் ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில், திங்களன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,540க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு  பவுன் ரூ.44,320க்கும் விற்கப்பட்டது. குறிப்பாக தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை பவு னுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

சிவசேனாவை உடைத்த பாஜக கூட்ட ணிக்குள் நுழைந்த ஏக்நாத் ஷிண்டே அணி  எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயம் செய்ய மகாராஷ்டிரா சபாநாயகருக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது  செய்யப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக் காக சந்திரபாபு நாயுடுவை கைது செய்து ஜெகன் மோகன் திருப்தி அடையலாம். சந்திரபாபு நாயுடு இவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீண்டு எழு வார் என்பதை காலம் உணர்த்தும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் உள்ள தனி யார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி  வைத்து மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதுதொடர்பாக காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில் பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14),  சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள “ஜவான்” திரைப்படம், வெளியான 11 நாட்களில் ரூ.858.68 கோடி வசூலை கடந்துள்ளது.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனி யார் உணவகத்தின் சமையலறை மழை  காரணமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளை 3 பேர் கற்றிய நிலையில், சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.