states

img

பதவி விலகிவிட்டு பேசுங்கள்!

ஆர்.என். ரவிக்கு திமுக கடும் கண்டனம்

சுதந்திரப் போராட்ட தியாகிகளை சாதி வாரியாக பிரித்து மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள் என்றும், மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் ஒரு சாதி சங்கத்திற்கு தலைவராக்கி இருப்பார்கள் என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்த நிலையில், அவருக்கு திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில், டி.ஆர். பாலு கூறியிருப்பது வருமாறு:


“தமிழ்நாட்டு மக்களின் வாக்கு ரிமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் நிறைந்த  தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக  நிறைவேற்றிய நீட் விலக்குச் சட்ட முன்வடிவு உள்ளிட்ட பல மசோ தாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக்  கொண்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளு நர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்  பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி,  நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதி ராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொட ர்ந்து பேசி வருவது,

அரசியல் சாச னத்திற்கு அவர் செய்கின்ற துரோ கம்! தமிழ்நாடு என்று சொல்லாதீர் கள், தமிழகம் என்றுதான் சொல்ல  வேண்டும் என்று உளறினார். சமஸ்  கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்ட தாகச் சொன்னார். எவ்வித ஆதார முமின்றி இப்படி பச்சைப் பொய்  களைச் சொல்வதுடன், மருதிருவர்  விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களைக் கொட்டிக் கடை விரித்திருக்கிறார்.  பாஜக தலைவர்கள் எப்படி  அன்றாடம் பொய் பேசி, வதந்தி  பரப்புகிறார்களோ, அவர்க ளுக்குப் போட்டியாக, தமிழ்நாட் டின் பாஜக தலைவராக வேண்டும்  என்ற ஆசையில் ஆளுநரும் பொய் யாகவே பேசுகிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வர லாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவ ருக்கு எதுவுமே கிடைக்கவில்லை யாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாம்.  மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட் டத் தியாகிகளின் வரலாற்றை சித்த ரிக்கும் ஊர்திகளை தில்லி குடியரசு  தின விழா அணிவகுப்பில் சேர்க்க  முடியாது என மறுத்து ஒன்றிய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்?  அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து- ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த  ஊர்திகளை வரவேற்ற காட்சியை  ஆளுநர் மாளிகையில் அமர்ந்தி ருந்த ரவி மறந்து விட்டாரா? அலுவல கத்தில் தேசியக் கொடியையே ஏற்  றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்  சாரகராக பவனி வரும் ரவி தனது  திருவாயை ஏன் அப்போது திறக்க வில்லை? விடுதலை நாளை துக்க நாளாக  அறிவித்தவர்களைக் கொண்டாடு கிறார்கள் என்று போலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு. விடுதலையின் பயன் யாருக் குக் கிடைக்கும் என்பதை விளக் கிய பெரியார்,

ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற்போக்குவாத பத்  தாம்பசலிகளின் கைகளில் அதி காரம் சிக்கி நாசமாகும் என தொலை நோக்குப் பார்வையுடன் சொன்  னார். அந்த தந்தைப் பெரியார்தான்,  மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்  பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி  தேசம்’ என்று பெயர் வைக்க வேண்  டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செய லாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக்  கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதிமுக முன்னாள் அமைச்சர்  களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறை வேற்றி அனுப்பிய மசோதாக்களி லும் கையெழுத்திடாமல் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவி தான் அந்த குறளுக்குப் பொருத்த மானவர்! தமிழ்நாட்டு மக்களின்  வரிப்பணத்தில் சுகம் அனுப வித்துக் கொண்டு - தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப  நடக்க வேண்டும்! இல்லையென் றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல்வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்!.”