விருதுநகர், செப்.3- விருதுநகர் சந்தையில் உருட்டு உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை யானது ஒவ்வொரு வாரமும் உயர்ந்த வண்ணம் உள்ளது .இதனால், சாதாரண, ஏழை, எளிய மக்கள் பெரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். விருதுநகர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய உணவுப் பொருட் களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ் லயன் விலையானது கடந்த வாரம் ரூ.15,200 என்ற விலைக்கு விற்பனையாகி வந்தது. இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. இதனால் மூட்டை ஒன்று ரூ.15,500 என விற்கப்பட்டது. உருட்டு உளுந்தம் பருப்பின் விலை யானது திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. அதாவது கடந்த வாரம் உளுந்தம் பருப்பு உருட்டு விலை யானது மூடை ஒன்றுக்கு ரூ.12,500 என விற்பனை செய்யப்பட்டது.
இந்த வாரம், ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமா க ரூ.13,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பின் விலையானது கடந்த வாரம் ரூ.10,400க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. இதனால் ரூ.10,500க்கு விற்பனையாகிறது. இதேபோல் பட்டாணி பருப்பின் விலை கடந்த வாரம் ரூ.6200 என விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்துள் ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.6300க்கு விற்பனை செய்யப்படுகிறது. புண்ணாக்குகள் விலை உயர்வு கடந்த வாரம் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.5800க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 உயர்ந்து மூட்டை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதேபோல் எள் புண்ணாக்கு ரூ.50 கிலோ ரூ.2400க்கு விற்பனையானது இந்த வாரம் ரூ.50 உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.2450 என்ற விலைக்கு விற்பனையாகிறது. பருப்புகளின் விலை உயர்வால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் துயரமடைந்துள்ளனர். தாங்கள் வழக்கம் போல் வாங்கும் பருப்பின் அளவை விட குறைவாகவே வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட அதே விலையே தொடர்கிறது.