states

‘குடும்பத் தலைவிகளின் எமன்’

தேனி மாவட்டம் கம்பத்தில் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் “பிரதமர் மோடி எட்டாண்டுகளில்  மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வங்கிக் கடன் வழங்கி இரண்டு கோடிப் பெண்களை லட்சாதிபதிகளாக்கியுள்ளார். அடுத்து அவர் மூன்று கோடிப் பெண்களை லட்சாதிபதிகளாக்குவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார். ஆனால், “2020-ஆம் ஆண்டில், 22,372 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் 61 தற்கொலைகள் அல்லது ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒன்று நிகழ்கிறது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு குடும்பத் தலைவிகள் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளுக்கு அடுத்தபடியாக குடும்பத் தலைவிகள் தான் அதிகளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொள்பவர்களில் 50 சதவீதம் குடும்பத் தலைவிகள். 2014-2020-ஆம் ஆண்டில் 1,52,127 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல, பிரதமர் மோடி தலைமை யிலான பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 9.50 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏழு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 139% அதிகரித்துள்ளது.