சென்னை, ஆக.18- கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணி இன்னும் 4 மாதத்தில் தொடங்கி ஓராண்டுக்குள் முடியும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் பணி 90 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், விரைவில் திறக்கப்படவுள்ளது. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. வண்டலூர் - கூடுவாஞ் சேரி புறநகர் ரயில் நிலை யங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந் துள்ளதால், நகர்ப் பகுதி களில் இருந்து கிளாம் பாக்கம் வருவோர் பெரும் பாலும் சாலை வழியாகத் தான் பயணிக்க வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி சாலை யில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. அதன்படி, ரூ.20 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டு மானப் பணிகளை ஓராண்டுக் குள் முடிக்க ரயில்வே திட்ட மிட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப் படும் புறநகர் ரயில்கள், கிளாம்பாக்கம் ரயில் நிலை யத்தில் நின்று செல்லும். இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.