சென்னை,பிப்.15- 33 மாதகால திமுக ஆட்சி ஏராள மான சாதனைகளை படைத்துள்ள தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங் களுக்கு வியாழனன்று (பிப்.15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அதன் சுருக்கம் வருமாறு: என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை “முன்னேற்ற மாதங்கள்! “சாதனை மாதங்கள்!” இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது இந்த ஆட்சியின் முதல் சாதனை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்த இந்தியா வின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை. இந்திய அளவில் பணவீக்கமா னது 6.65 விழுக்காடாக இருக்கும் போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்தது உள்ளது! இது, நான்காவது சாதனை. ஏற்று மதி தயார் நிலை குறியீட்டில் இந்தியா வில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! இது, ஏழாவது சாதனை. கல்வியில் இரண்டாவது இடத்துக்கு தமிழ் நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சி யின் எட்டாவது சாதனை. புத்தாக்கத் தொழில்கள் வரிசை யில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப் பது ஒன்பதாவது சாதனை. இளை ஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகி யோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதாக சொல்லத் தொடங்கி இருப்பதுதான் இந்த ஆட்சியின் பத்தாவது சாதனை.
சமூக சீர்திருத்த ஆட்சி
இந்தப் பத்து மட்டுமல்ல, இந்தியாவின் தென் மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது; அதன் திட்டங்களை தெரிந்து வந்து நம் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரி களும் இங்கு வந்து பார்த்துச் செல்வது தான் இந்த ஆட்சியின் வரலாற்றுச் சாதனை. இப்படியாக 33 மாத கால ஆட்சியின் சாதனை களை, பட்டியலிட்டுக் கொண்டே இருக்க முடியும். மேலும் பயனடைந் தவர்கள் எண்ணிக்கையும் ஏராளம் ஏராளம். ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் கேட்டு நிறை வேற்றிக் கொடுக்கும் ஆட்சி இது. இவை எல்லாம் வெறும் எண்ணிக்கை அல்ல; இவை எல்லாம் இந்த ஆட்சியின் எண்ணங்கள்! தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்த ஆட்சி நடைபெற்று வருவதன் அடை யாளங்கள்! அதனால், பல முன்னணி நாளேடுகளும் இந்த அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. நடப்பாண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 797 பணிகள், 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப் பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, அதில் 582 பணிகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 63 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வரு கின்றன. மேலும் உள்ள பணிகளுக்கு உரிய ஆணைகள் வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்
நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களை சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை. 30.6.2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களை தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இவை அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில் சாதிக்கப்பட்டது. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவை இல்லை, விரும்பவில்லை. மாநில முதலமைச்சர்களே தில்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.
வீடுகள் பழுது பார்க்க ரூ.2000 கோடி
கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கும், புனரமைக்கவும் ரூ. 2 ஆயிரம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஒரு நீண்ட கால கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்று சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்களும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறு பான்மையின மக்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆவன செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.