மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881இல் துவங்கியது முதல் ஒரு போதும் நிறுத்தப்பட வில்லை. உலகப் போர்களின் போது கூட கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் மோடி அதை நிறுத்திவிட்டார். அதுமட்டுமல்ல, சாதிவாரி கணக் கெடுப்பு நடத்துவதையும் அவர் நிராகரித்துவிட்டார். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகவே செயல்படுவதாகவே பாசாங்கு செய்துகொண்டே அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறையை வலுப்படுத்தும் மனுவாத திட்டங்களையே மோடி அரசு அமலாக்குகிறது. இந்தப் பின்னணியில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டு பீகார் வழிகாட்டியிருக்கிறது. இந்தியா கூட்டணி கட்சிகளை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவை என்றும் நான்தான் அவர்களது பாது காவலன் என்றும் கூறிக்கொண்ட மோடியின் வேடத்தை கலைத்திருக் கிறது பீகார் கணக்கெடுப்பு.