states

9 பேரின் உடல்கள் உ.பி.க்கு அனுப்பிவைப்பு

மதுரை, ஆக.27-  

      மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் பலியான ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), 2.பிரேம் நகர், சிட்டாப்பூர். தீபக் கஸ்யாப் (21), நயபாஷி, கவுசல்யா பவன், சிட்டாப்பூர். 3.அன்குல் (36), சாய்பாபா ரோடு, சிட்டாப்பூர். 4.சத்ரு தமன் சிங் (65), மவுலா அதஸ் நகர், சிட்டாப்பூர். 5.பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மீடா டாக்கீஸ் கிராமம், ஹர்தோஸ் மாவட்டம். 6.மித்திலேஸ் (62), ஆதர்ஸ் நகர், செக்டார்-1, நைபா லபூர், லக்கிம்பூர் ரோடு, சிட்டாப்பூர். 7.சாந்திதேவி வர்மா (70), கோட்டியா,  லக்கிம்பூர். 8.குமார் ஹிமானி பன்சால் (27), அக்ரசன் கண்டன் கல்லூரி அரு கில், சவுக், லக்னோ. 9.மனோரமா அகல்  வால் (81), அக்ரசன் ஆண்டன் கல்லூரி  அருகில், சவுக், லக்னோ ஆகிய 9 பேரின்  உடல்களும் மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனையில் பிரேத பரி சோதனை செய்து முடிக்கப்பட்டது. பின்  னர் அவர்களது உடல்களுக்கு அமைச்  சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன், ஆட்சியர் சங்கீதா மற்றும் அதி காரிகள் அஞ்சலி செலுத்தினர். இதை யடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம்  பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்  டது. அங்கிருந்து 2 தனி விமானங்களில் உடல்கள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ கொண்டு செல்லப்பட்டது.