states

குஜராத் மாடல் வளர்ச்சி’யை துணிகட்டி மறைத்த பாஜக அரசு!

அகமதாபாத், ஏப். 23 - ‘குஜராத் மாடல் வளர்ச்சி’யை பார்க்க முடியாமலேயே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை, பாஜக ஆட்சியாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் வியாழனன்று வந்திறங்கிய அவரை குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர். போரிஸ் ஜான்சனின் இந்த 2 நாள் பயணத் தில், இந்தியா  - இங்கிலாந்து இடையே ராணு வம், வர்த்தகம், மக்கள் தொடர்பு ஆகிய துறைக ளில் இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத் தும் வகையில் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டி லான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கேற்றாற்போலவே, சபர்மதி காந்தி ஆசிரமத்திற்கு சென்று நூல்நூற்ற கையோடு, போரிஸ் ஜான்சன் இந்தியாவின் முதல்பெரும் பணக்காரரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான கவுதம் அதானியை தனியாக சந்தித்து உரையாற்றினார். ஜான்சனுக்கு அதானி தடபுடல் விருந்தும் அளித்தார். ம.பி., குஜராத், தில்லி உள்ளிட்ட இடங்க ளில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை பாஜக ஆட்சியாளர்கள், புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கி வரும் நிலையில், குஜராத்தில் இயங்கும் புல்டோசர் தொழிற் சாலையையும் போரிஸ் ஜான்சன் நேரில் பார்வை யிட்டார். அதைத் தொடர்ந்து, வெள்ளியன்று தில்லி சென்ற ஜான்சனை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். குடியரசுத் தலைவர் மாளி கையில் ராணுவ அணிவகுப்புடன் ஜான்சனு க்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப் பட்டது. 

வழக்கமான இந்த சம்பிரதாயங்கள் ஒரு புறமிருக்க, குஜராத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் மேற்கொண்ட போது, சாலையின் இருபுறமும் இருந்த குடிசைப் பகுதி களை, குஜராத் பாஜக அரசு வெள்ளைத் துணி கட்டி, ஜான்சனின் பார்வையில் படாமல் மறைத் தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குஜராத் அபரிமிதமான வளர்ச்சி பெற்று விட்டது. குஜராத் மாடலை நாடே பின்பற்று கிறது என்று பெருமையடிக்கும் பாஜக-வினர், குடிசைப் பகுதிகளை துணிகட்டி மறைத்தது ஏன்? இவ்வளவுதான் குஜராத் வளர்ச்சியா? என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி களை எழுப்பியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப், கடந்த 2020 பிப்ரவரி 24, 25 தேதிகளில் அவரது மனைவி மெலனியாவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

ரூ. 100 கோடி ஒதுக்கி அவ ருக்கான வரவேற்பு ஏற்பாடுகளை செய்த குஜராத் பாஜக அரசு, அப்போதும் படேல் சர்வ தேச விமான நிலையத்தில் துவங்கி மொதேரா மைதானம் வரை டிரம்ப் காரில் செல்லும் பகுதி யில், சரணியாவாஸ் அல்லது தேவ் சரண் சேரி என்று அழைக்கப்படும் குடிசைப் பகுதிகளை, டிரம்ப் கண்களில் பட்டுவிடாதபடி 8 அடி உயரத்திற்கு சுவர்கள் எழுப்பி மறைத்தது. இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்க ளை 7 நாட்களில் இடத்தைக் காலி செய்து வெளி யேற வேண்டும் என்று அகமதாபாத் மாநக ராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸூம் அனுப்பி யது. இதே நடைமுறையையே போரிஸ் ஜான்சன்  சுற்றுப்பயணத்திலும் குஜராத் பாஜக அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.