விளையாட்டு உலகின் விளையாட்டு திரு விழாக்களில் ஒன்றான ஆசிய விளை யாட்டுப் போட்டியின் 19-வது சீசன் சீனாவின் ஹாங்சோ நகரில் சனியன்று தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டியை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். போட்டியில் இந்திய அணியும் பங்கேற்றுள்ளது.
சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் ஊதி யம், பணிநிரந்தரம் கோரிய வழக்கில் நீதி மன்ற விசாரணைக்கு உதவுவதற்காக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆன்லைனில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் ஐ.டி. விங் மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்பு படுத்தியுள்ளதோடு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவை உடனே நீக்குவதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் திமுக ஐ.டி. விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு மிரட்டல் விடுத் துள்ளது.
பட்டினப்பாக்கத்திற்குக் கரைக்க கொண்டு வரப்படும் அனைத்து விநாயகர் சிலை களும், வழியெங்கும் சிசிடிவி கொண்டு கண்கா ணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரி வித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டாரை வெளி யில் எடுக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை உள்ள நிலையில், சனிக்கிழமையன்று கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,521க்கும், பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 44,168க்கும் விற்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த சின்னஊணை கிராமத்தில் கோவில் திருவிழாவின் பொழுது அதே கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (23) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் யோகநாதன் (38), பால கணேசன் (27) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே ராமச்சந்திராபுரத்தில் 100 திட்டப்பணி யில் ஈடுபட்டிருந்தவர்களை விஷவண்டுகள் கொட்டியதில் 43 பேர் படுகாயம் அடைந்த நிலை யில், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.