சென்னை, செப். 28- சென்னையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் நேரில் ஆஜராகி சாட்சி யம் அளித்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதி மன்றத்திற்கும், காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை சவுகார்பேட்டை நந்த கிஷோர் சந்தக் என்பவர், தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப் படையில் காவல்துறையினர் 2017 ஆம் ஆண்டு ஆறு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சொத்து பிரச்சனை காரணமாக, பிரச்சனை ஏற்பட்டதாகவும், தற்போது சமர சம் செய்து விட்டதாகவும் கூறி யுள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசார ணைக்கு வந்தபோது, கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நந்த கிஷோர் சந்தக் கொல்லப்பட வில்லை. அவர் தற்போது நீதி மன்றத்தில் ஆஜராகி உள்ளார் என சுட்டிக்காட்டினார். இதை யடுத்து கொலை மிரட்டல் வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது நீதிபதிக்கு தெரியவந்தது. கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இங்கு உயிருடன் உள்ள நிலையில், எப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப் பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நந்த கிஷோர் சந்தகை பார்த்து “கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்துக் கொள்கிறேன்”என நகைச்சுவையாக கூற நீதிமன்ற அறையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதையடுத்து, இது போன்ற செயல்கள் காவல்துறையை கேலிக்குள்ளாகும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதி கள், இயந்திரத்தனமாக செயல் பட்டுள்ளதாக கூறி, ஆறு பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.