states

‘கீழ்சாதி’ என்று சொல்வதா?

சென்னை, செப். 11- சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சனாதன தர்மத்தில் நல்ல விஷயங்கள்தான் உள்ளதாகவும், அதில் ஏற்றத் தாழ்வு எதுவுமே இல்லை  எனவும் அண்ணாமலை உள்ளிட்ட  பாஜக தலைவர்கள் வாதிட்டு வருகின்ற னர். அதிலும் குறிப்பாக சனாதனம் தர்மம் குறித்து அண்ணாமலை பல்வேறு உதாரணங்களை கூறி வரு கிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திருப்புன்கூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் நந்தி  சிலை சற்று விலகி இருக்கும். ஏனெனில் கீழ்சாதியைச் சேர்ந்த ஒருவர் சிவனை பார்க்க வந்தபோது அவருக்கு சிவனை  பார்க்க அனுமதி இல்லை என்று கூறிய தால் நந்தியை சற்று விலகச் சொல்லி காட்சியளித்த தர்மம் நம் சனாதன தர்மம். இதையெல்லாம் ஒவ்வொரு கோயிலிலும் நாம் பார்க்கிறோம்” என்று கூறினார். பட்டியலின மக்களை குறிப்பிட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கீழ்சாதி என்ற சொல் லாடலை அண்ணாமலை பயன்படுத் தியது சர்ச்சையாக மாறியுள்ளது.

மேலும், அங்கு வழிபடச் சென்றது நந்தனார் என்பது கூட தெரியாமல் திருமாலை வணங்கும் வைணவரான திருப்பாணாழ்வார் சிவனை வழிபடச் சென்றார் என்று அண்ணாமலை கூறியுள்ளதாகவும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா விமர்சித்தார். இந்நிலையில் விசிக பொதுச் செய லாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் தனது ட்விட்டரில், “தமிழர் மெய்யியல் மரபை  போற்றிய மாமன்னன் நந்தனை கீழ்சாதி  என குறிப்பிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோர  வேண்டும்” என்று கருத்து பதிவிட்டுள் ளார். பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என ஏற்றத்தாழ்வுகளை கட்டமைத்தது  யார் என்றும், இந்த மண்ணின் பூர்வகுடி களை கீழ்சாதி என அருவருப்பாய் சொல்ல அண்ணாமலைக்கு ஆணவம் வந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பிய  அவர், இனியும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொண்டிருப்பது என்றும்  ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள் ளார். சனாதனம்தான் சமத்துவம் பேசுகிறது என்று சொல்லிக்கொண்டே பட்டியலினம், தாழ்த்தப்பட்ட என்ற  வார்த்தைகளைக் கூட பயன்படுத்தா மல் கீழ்சாதி என அண்ணாமலை பேசி யுள்ளார். இதுதான் பாஜகவினர் பேசும்  சனாதன தர்மம் என பலரும் விமர்சித் துள்ளனர்.