states

மாற்றுத்திறனாளிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் கோரிக்கை வெற்றி

சென்னை,ஆக.13-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்-  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் விடுத்த கோரிக்கையால் மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர்  உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள் ளார். இதனை வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, பொதுச் செயலாளர்  தோ.வில்சன் ஆகி யோர் வெளியிட்டுள்ள  செய்தியில், “அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவிகளுக்கும் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 7ஆம் தேதி  அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  ஆர்ப்பாட்டம்  நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ஆகஸ்ட் 6 அன்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நமது அமைப்பின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நம்பிக்கை அளிக்கும் விதத்தில், நியாயமான இக்கோரிக்கையை தமிழக முதல்வரிடம் எடுத்துச் செல்வ தாகவும், முதல்வர்  நல்ல முடிவு எடுப்பார் என்றும், ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார். உண்மையில் தமிழக  முதல்வர், நமது நியாயமான கோரிக்கையை ஏற்று, மாற்றுத்திற னாளி உதவித்தொகை பெறும் குடும்பத் தலைவிகளோடு சேர்த்து, முதியோர், விதவை உள்ளிட்ட உத வித்தொகை பெறுபவர்களும் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று  அறிவிப்பு வெளியிட்டார்.  இச்செய்தி தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மிகப்பெரிய ஆறு தலை அளித்துள்ளது. நியாயமான நமது கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் அறிவிப்பை வெளி யிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள் ளனர்.