புதுதில்லி, மே 25 - புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை யொட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷா புதனன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, “புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின்போது, சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கு சான்றாக சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதினங்கள் தில்லியில் பிரதமரிடம் செங்கோலை ஒப்படைப்பர்” என்று அவர் கூறியிருந்தார். 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது, திருவாவடு துறை ஆதினத்தால் வடிவ மைக்கப்பட்ட, சைவ சமயத்தின் குறியீடான நந்திச் சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல், அன்றைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டன் மூலமாக, அது இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு-விடம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சி மாறியதற்கு குறியீடாக இவ்வாறு செய்யப் பட்டது. இந்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதி தாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், மக்களவைச் சபாநாயகர் இருக்கை அருகே இந்த செங்கோலை வைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ் நாட்டின் ஆதினங்களை வரவழைத்து, அவர்கள் கையால் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்க முடிவு செய்துள்ளது. இதனை செய்தியாளர் சந்திப்பின் போது அமித்ஷா தெரிவித்தார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் “நீதி தவறாமல் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வைத்திருந்த செங்கோலை பாஜக ஆட்சியாளர்கள் கையிலெடுத்திருப்பது சரியா?” என்று அதிரடியான கேள்வியை எழுப்பினார். “அதுவும் கர்நாடக தேர்தலுக்குப் பின் தென்னிந் தியாவில் பாஜக-வுக்கு கதவு சாத்தப்பட்ட நிலையில் இவ்வாறு செய்வது, முறைதானா?” என்றும் கேட்டார். இதனால், அமித்ஷாவின் முகம் திடீரென இருண்டு போனது. இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர், செய்தியாளர் கேள்வியை முடிப்பதற்கு முன்பா கவே, குறுக்கிட்டு, “நீங்கள் கேட்க வருவது எனக்கு புரிகிறது, உங்கள் நேரம் முடிந்தது” என்று கூறிவிட்டு அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், “ஹோ கயா ஆப்கா” என்று கூறி அப்படியே வேறு கேள்விக்குத் தாவிச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வலைத்தள டி.வி.யும் இதனை பகிர்ந்துள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூக வலைதளவாசி ஒருவர், “தென்னிந்திய பத்திரி கையாளர்களுக்கு மட்டுமே, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடி அரசாங்கத்திடம் கேள்வி கேட்க தைரியம் உள்ளது. ஆனால் அவரது எளிய கேள்விக்கு பதிலளிக்க உள்துறை அமைச்சருக்குத் தைரியம் இல்லை; அதனால்தான் “ஹோ கயா ஆப்கா” என்று அமித் ஷா கூறியுள்ளார் என்று விமர் சனங்களை முன்வைத்துள்ளனர்.