இம்பால், ஜூன் 7- மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை யினருக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின ருக்கும் இடையே நடைபெற்று வரும் மோத லில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி அம்மாநிலத்தில் பதற்ற மான சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே கடந்த ஒரு மாத காலமாக நிகழும் இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்குழு அமைத்தாலும், வன்முறை ஓயவில்லை. செவ்வாயன்று (ஜூன் 7 - அதிகாலை) சுக்னோ மற்றும் செரோ பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவு (பிஎஸ்எப்) வீரர் ரஞ்சித் யாதவ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். மேலும் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்ட அசாம் ரைபிள் பிரிவில் 2 வீரர்களும் காயமடைந்தனர். இதனிடையே, மேற்கு இம்பால் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மிகப்பெரிய கும்பல் (எந்த இன மக்கள் வழிமறித்தனர் என்பது தெரியவில்லை) ஆம்புலன்சை வழி மறித்து விசாரித்த பின் கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.