தொலைக்காட்சி ஊழியர்கள் வழக்கு
மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிய 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜூலை 31 ஆம் தேதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஊழியர்கள் எழுப்பிய கேள்விக்கு தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்நிலை யில் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 19 ஊழியர்கள் தொழிலாளர் துறையில் புகார் அளித்துள்ளனர். செப்டம்பர் - 12 ஆம் தேதி இந்தப் புகார் மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசும் தொழிலாளர் துறை ஆணை யரும் தலையிட்டு, ஊழியர்கள் அளித்துள்ள புகார் மனுக்களை விரைவாக விசாரித்து, சட்டப்படி யான இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்தி யுள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.43 லட்சம் கோடி!
ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி வசூலாகி உள்ளது. நடப்பு 2022- 23 நிதியாண்டின் மே மாதத்தில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி, ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி, ஜூலையில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி என ஜிஎஸ்டி வசூல் ஆகியிருந்தது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடியாக சற்று குறைந்துள்ளது. அதேநேரம், கடந்த 2021 ஆகஸ்டில் வசூலான ரூ.1 லட்சத்து 12 ஆயி ரத்து 020 கோடியுடன் ஒப்பிடுகையில் 28 சதவிகிதம் அதிகமாகும். மேலும், தொடர்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
வர்த்தக சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு
வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் (19 கிலோ) விலை 91 ரூபாய் 50 காசுகள் குறைக் கப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் 2 ஆயிரத்து 141 ரூபாயாக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை தற்போது 2 ஆயிரத்து 045 ரூபாயாகவும், தில்லியில் ஆயிரத்து 885 ரூபாயா கவும், கொல்கத்தாவில் ஆயிரத்து 995 ரூபாய் 50 காசுகளாகவும் குறைந்துள்ளது. மும்பையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. ஆயிரத்து 936 ரூபாய் 50 காசுகளில் இருந்து ஆயிரத்து 844 ரூபாயாக குறைந்துள்ளது. அதேநேரம், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை (14.2 கிலோ) மாற்றப்படவில்லை.
ஏசி ரயில் டிக்கெட் ரத்துக்கே 5 சதவிகித ஜிஎஸ்டி!
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மட்டுமன்றி, முன்பதிவை ரத்து செய்வதற்கும் மோடி அரசு அண்மை யில் 5 சதவிகித ஜிஎஸ்டி விதித்தது. இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் மட்டுமே கேன்சலேஷன் கட்டணத்துடன் சேர்த்து 5 சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. முதல் வகுப்புக்கு ஏசி-க்கு, 240 ரூபாய் கேன்சலேஷன் கட்டணத்துடன் 5 சதவிகித ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயும், இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டுக்கு 200 கேன்சலேஷன் கட்டணத்துடன் 5 சதவிகித ஜிஎஸ்டி, மூன்றாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டுக்கு 180 கட்டணத்துடன் 5 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப் படும் என கூறியுள்ளது.
ஆர்எஸ்எஸ்-சை பாராட்டிய மம்தா: ஒவைசி கண்டனம்
ஆர்எஸ்எஸ் அமைப்பை மோசமானதாக நான் கருதவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பல நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்கள் பாஜக-வை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஒருநாள் தங்களது மவுனத்தைக் கலைப்பார்கள்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி யிருந்தார். இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு வரலாறு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது. இவ்வளவு வெளிப்படையான நேர்மையான மம்தாவின் பேச்சுக்கு அவரது இஸ்லா மிய தலைவர்கள் அவரை பாராட்டுவார்கள் என நம்புகிறேன்” என்று ஒவைசி குறிப்பிட்டுள்ளார். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்விலும் மம்தா ஆர்எஸ்எஸ்-ஐ பாராட்டிய தாகவும் ஒவைசி சுட்டிக்காட்டியுள்ளார்.
கேரள உயர்நீதிமன்றம் கருத்து
திருவனந்தபுரம், செப்.01- எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய “லிவிங் டுகெதர் (LIVING TOGETHER)” உறவுமுறை திருமணம் அதிகரித்து வரு வதாகவும், புதிய தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திரு மணத்தை தடையாக பார்க்கின்றனர் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கள் கவலை கருத்து தெரிவித்துள்ளனர். மேலும்“லிவிங் டுகெதர்” திரு மணங்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரிப்பு சமூகத்தை கடுமை யாக பாதிக்கும் என நீதிபதிகள் பொதுநல எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூலித்தேவர் பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, செப்.1- மாவீரன் பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் திருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளங்க ளில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி யிருப்பதாவது:- ‘சல்லிக்காசு தரமுடி யாது’ என ஆங்கிலேயரை விரட்டிய டித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தே வரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம். நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு. இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியாவின் தாயார் மரணம்: முதல்வர் இரங்கல்
சென்னை,செப்.1- காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவுக்கு தமிழக முதல்வ ரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டா லின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ அவர்களின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த மற்றும் இதயப்பூர் வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் அன்பிற்குரிய தாயின் இனிய நினைவுகளில் அவர் ஆறுதல் பெறட்டும் என்று குறிப்பிட்டுள் ளார்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு
சென்னை, செப்.1- தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்க ளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 3 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழ் நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்க ளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.