சென்னை, ஏப். 29- பள்ளிகளில் அமல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தையும் சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா, பொதுச்செயலாளர் அ.மலர் விழி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் விரிவுபடுத்தி வரும் ஜூன் கல்வி ஆண்டு முதல் காலை உணவு வழங்க அதற்கான ஆய்வு கூட்டங்களை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை இறுதிப்படுத்தி அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டம் 1982ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் துவக்கப்பட்டு கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பெயரிலேயே செயல்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் திட்டத்தை அமல்படுத்திய பணியாற்றிய ஊழியர்களே என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், காலை உணவு திட்டத்தை அனைவரும் வரவேற்பது போல் சத்துணவு ஊழியர்களும் வரவேற்கிறோம். இந்த திட்டத்தையும் எங்களிடம் ஒப்படையுங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டுகி றோம் என சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். எனவே, அரசு இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். காலை உணவு திட்டத்திற்கு தேவைப் படும் அனைத்தும் மத்திய சத்துணவு திட்டத்தில் தயார் நிலையில் இருக்கும் போது, காலை உணவுக்கு பயன்படுத்து வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், மகளிர் சுய உதவிக் குழு மூலம் செயல்படுத் தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட அரசாணையில் உணவு உண்ணும் மாண வர்கள் எண்ணிக்கை மையத்தின் தூரம் இவைகளை பொறுத்து அவர்களுக்கு அரசு மதிப்பூதியத்தை நிர்ணயம் செய்யும் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சத்துணவு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எனவே, சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழி யர்களிடம் ஒப்படைத்து அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியத்தை வழங்க அரசு முன்வரவேண்டும்.