பெங்களூரு, அக்.8- தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தமிழக எல்லையையொட்டி அமைந் துள்ளது அத்திப்பள்ளி. இங்குள்ள பட்டாசுக்கடையில் சனிக்கிழமை மாலை நேர்ந்த விபத்தில் 14 பேர் உயி ரிழந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர் ராமசாமி ரெட்டி மற்றும் அவரது மகன் நவீன் ரெட்டி ஆகியோர் மீது அத்திப் பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளியில் கர்நாடகம்-தமிழக எல்லையில் சாலையோரம் பட்டாசுக் கடைகள் உள்ளன. அங்கு ராமசாமி ரெட்டி என்பவரின் மகன் நவீன் என்ப வருக்குச் சொந்தமான ஒரு பட்டாசு கடையும் உள்ளது. அந்தக் கடையின் பின்புறம் பட்டாசு குடோனும் உள்ளது. சனிக்கிழமை அவரது கடைக்கு சிவ காசியில் இருந்து இரண்டு லாரிகளில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு லாரியில் இருந்து பட்டாசு களை குடோனில் தொழிலாளர்கள் இறக்கி வைத்தனர். இன்னொரு லாரி யில் இருந்து பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடை யில் மொத்தம் 35 பேர் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 14 பேர் பலி யாகினர். ஏழு பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்
இந்த விபத்தில் நீப்பத்துறை கிரா மத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), அம்மா பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேட்டப் பன் (25), ஆதிகேசவன் (23), விஜயராக வன் (20), இளம்பருதி (19), ஆகாஷ் (23), கிரி (22), சச்சின் (22); மற்றும் தருமரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் பிரபா கரன் (17), வசந்தராஜ் (23), அப்பாஸ் (23) ஆகியோர் உயிரிழந்தனர். மூன்று உடல்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் ஆக்ஸ் போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று உடல்களையும் தடய அறிவியல் வல்லுநர்கள் குழுக்கள் டிஎன்ஏ சோத னைக்கு உட்படுத்தி அவர்கள் யார் என்ப தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் முற் றாக கருகி விட்டதால் அவர்களை அடை யாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏழு பேர் காயம்
இந்த விபத்தில் மொத்தம் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பட்டாசு கடை உரிமையாளர் ராமசாமி ரெட்டியின் மகன் நவீன் ரெட்டி, ராஜேஷ், மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூன்று பேர் பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சஞ்சய், சந்துரு, ராஜேஷ் மற்றும் பால் கபீர் ஆகிய நான்குபேரும் அத்திப் பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்குப்பதிவு அத்திப்பள்ளி காவல்துறையினர், கடையின் உரிமையாளர் ராமசாமி, அவரது மகன் நவீன் ஆகியோர் மீது, “அலட்சியத்தின் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக (வெடிபொருள் பொருள் சட்டம், 1908 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் இரங்கல்
‘‘அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியைக் கேட்டு துய ரமடைந்தேன். விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்க ளது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயம் அடைந்தவர் களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயி ரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப் படும்’’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர்-துணை முதல்வர்-தமிழக அமைச்சர்
அத்திப்பள்ளி தீ விபத்தில் சிகிச்சை பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பெங்களூர் விக்டோரியா அரசு மருத் துவமனை மற்றும் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சந்தித்து நிவா ரண நிதி உதவி வழங்கி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் தமிழ் நாடு சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உயிரிழந்தோருக்கு அஞ்சலி தொடர்ந்து தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேரின் உடல் களுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்த லின்படி பெங்களூரு மருத்துவமனை யில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக கர்நாடகா மாநில முதல் வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தீ விபத்து நடந்த பட்டாசு குடோனை பார்வையிட்டனர்.
நிவாரணம்
பட்டாசு வெடிவிபத்தில் பலியான வர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர். “ஏழைகள், ஒன்றும் அறி யாத தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள னர். இங்கு பட்டாசு கடை அமைக்க அனு மதி உள்ளது. குடோன் அமைக்க அனு மதி இல்லை. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் பாது காப்பு குறைபாடுகளைச் நமக்கு காட்டி உள்ளது. இனிமேல் அனைவரும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார். கர்நாடக முதல்வர் சித்தராமையா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் 13 பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. பலியான 13 பேரின் குடும்பத்தினர், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை கடவுள் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள் கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். வழக்கு சிஐடி-பிரிவிற்கு மாற்றம் இந்த நிலையில், உடற்கூராய்வு செய்யப்பட்ட உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக் கப்பட்டன. அத்திப்பள்ளி பட்டாசு விபத்து வழக்கை சிஐடியிடம் ஒப்ப டைத்து கர்நாடக அரசு ஞாயிறன்று மாலை உத்தரவிட்டுள்ளது.