தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் பொன்விழா நிறைவையொட்டி செவ்வாயன்று (செப்.19) சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் இ.தேரணிராஜன் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் மருத்துவர் கவிதா, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கே.வெங்கடேசன், சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார், பொதுச்செயலாளர் வி.பார்த்தசாரதி, பொருளாளர் என்.சங்கர், செயலாளர்கள் ஏழுமலை, கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.