states

இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டும் என்கிறார் மோகன் பகவத்!

நாக்பூர், அக். 5 - நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் -ஸின் விஜயதசமி விழாவில், மோகன் பகவத் கலந்து கொண்டு உரை யாற்றியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: இந்து ராஷ்டிரம் என்ற கருத்து  அனைத்து மட்டத்திலும் விவாதிக்கப் பட்டது. இந்த கருத்தை பலர்  ஆதரித்தாலும், இந்து என்ற வார்த்தை க்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதற்குப் பதில் மாற்று வார்த்தையை பயன்படுத்தும்படி கூறுகின்றனர். ஆனால், அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்து என்ற சொல்லை வலியுறுத்திக் கொண்டே இருப்போம். ஆங்கிலம் குறித்து இங்கு பல் வேறு கட்டுக்கதைகளைப் பரப்புகிறார் கள். நாம் நமது வாழ்க்கையிலும் தொழிலிலும் சிறப்பாக இருக்க ஆங்கி லம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை மாணவர்களைப் பண்பட்டவர்களாகவும், தேசபக்தி கொண்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழிவகுக்கிறது. சமூகம் இதை ஆதரிக்க வேண்டும். இந்தியாவிற்கு மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை. மதம் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் கட்டாய மதமாற்றங்களும் அதி கரித்துவிட்டன. இதனால் இதுபோன்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு உடைந்து விடும் அச்சம் ஏற்படக்கூடும். இதற்கு கொசோவோ மற்றும் தெற்கு சூடான் உதாரணம்.  மக்கள்தொகை கட்டுப்பாடு மட்டு மின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இதை நம்மால் புறக்கணிக்க முடியாது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்கிறது. பிறப்பு விகிதத்தில் வேறுபாடு கள் உள்ளன. பேராசை, கட்டாய மத மாற்றம் உள்ளிட்டவை இதற்குக் கார ணம். எனவே, அனைத்து விஷயங் களையும் கருத்தில் கொண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டம் தேவை.”  இவ்வாறு மோகன் பகவத் பேசி யுள்ளார்.