states

பழங்குடியினரை கொன்ற குண்டர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்-கண்டனம் முழங்க அழைப்பு

புதுதில்லி, மே 8- மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை வெட்டி யதாகக் கூறி பழங்குடியினர் இருவரை பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீராம் சேனா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்திருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இக்கொலைகளுக்கு எதி ராகக் கண்டனம் முழங்கிடுமாறும் கிளைகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே,  பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியப்பிரதேச மாநிலம், சியோனி மாவட்டம், சிமாரியா மற்றும் சாகர் கிராமங்களில் தன்சாய் இன்வாதி மற்றும் சம்பத்லால் வாட்டி என்னும் இரு பழங்குடியினரை, பசுவை வெட்டினார்கள் என்று கூறி பஜ்ரங் தளம் மற்  றும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த குண் டர்கள் கொடூரமான முறையில் கொலை செய்  துள்ளார்கள். இதற்கு அகில இந்திய விவசாயி கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவ்விரு இளை ஞர்களும் பசுவை வெட்டினார்கள் எனப் பொய்க் குற்றஞ்சாட்டி இவ்விரு அமைப்புகளைச் சேர்ந்த வர்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளிப்படையாகவே கிராமத்தினர் மீது இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கு தல் தொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் செயல்படும் இக்குண்டர் கும்பல்களுக்கு மத்தியப்பிரதேச பாஜக அரசாங்கம் நேரடியாகவே பாதுகாப்பு அளித்து வருவது தெளிவாகவே தெரிகிறது.

பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடி யினர் மீது பசுவை வெட்டுகிறார்கள் என்ற பெய ரில் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது அதிகரித்தி ருக்கிறது. இவ்வாறு கொலைபாதகச் செயல் களில் ஈடுபடும் பசுப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குண்டர்களுக்கு, தாங்கள் அரசாங்கத் தால் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சம் கிஞ்சிற்றும் கிடையாது. இத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளில் இந்துத்துவா குண்டர் குழுக்கள் ஈடுபட்டு வருவது தெளிவாகவே தெரி கிறது.  இத்தகைய நிகழ்வுகள் குறைவதற்குப் பதிலாக நாளும் அதிகரித்துக்கொண்டிருப்பதிலி ருந்து பாஜக அரசாங்கத்தின் இழிவான நோக்கம் என்ன என்பது நன்கு தெரிகிறது.

ஆரம்பத்தில் முஸ்லிம்களைத் தாக்கி வந்த இந்தக் குண்டர்கள், இப்போது தலித்துகள் மற்  றும் பழங்குடியினரையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தக் குழுவைச் சேர்ந்த வர்கள் உயர்சாதி இந்துத்துவா சித்தாந்தத்தை உயர்த்திப்பிடிப்போர் என்பதும், இவர்களுக்கு ஆளும் பாஜக அரசாங்கங்களின் அரவணைப்பு முழுமையாக இருப்பதும் தெளிவாகவே தெரி கிறது. விளிம்புநிலை மக்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவது, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கொலைகளில் ஈடுபட்டுள்ள பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீராம் சேனையைச் சேர்ந்த  கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  கொல்லப் பட்ட இரு பழங்குடியினரின் குடும்பத்தினருக்கு  இழப்பீடு வழங்க வேண்டும்.  இந்தக் கொலை களுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை விவசாயிகள் சங்கத்தின் கிளைகள் நடத்திட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.