இம்பால், ஜூலை 23- மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலை யில், அங்கு நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலையை காரணம் காட்டி, தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியளிப்பதாக தில்லி மாநில மகளிர் ஆணைய (DCW)தலைவர் ஸ்வாதி மாலி வால் தெரிவித்து உள்ளார். ஸ்வாதி மாலிவால், ஜூலை 23 அன்று மணிப்பூருக்குச் சென்று ஜூலை 30 வரை அங்கேயே இருக் கத் திட்டமிட்டிருந்தார். தனது வருகை குறித்து, அதிகாரி களுக்குத் தெரிவித்த பின்னரே, பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தார். இந்நிலையில், “நான் மணிப்பூருக்குச் செல்வதாக இருந்த நிலையில், அம்மாநில அரசு திடீ ரென்று எனக்கு அனுமதி மறுத்து உள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு, அதிர்ச்சியாகவும், அபத்த மாகவும் உள்ளது.. பாலியல் வல்லு றவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேச, நான் ஏற்கெனவே எனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன். ஏன் என்னை நிறுத்த முயற்சிக்க வேண்டும்???” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.