states

img

எத்தனை வழக்கில் தண்டனை வாங்கிக் கொடுத்தீர்கள்? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

2023இல் பணமோசடி வழக் கில் கைதான தொழிலதி பர் ஒருவரின் ஜாமீன்  வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய்எஸ்.ஓகா, நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின் உச்சநீதிமன்ற நீதிபதி கள் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம்,”அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்குகளில் எத்தனை வழக்கு களில் விசாரணை முடிந்துள்ளன. எத்தனை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளீர்கள்? என நீங்கள் கண்டறிந்து சொல்ல வேண்டும். ஜாமீன் கோரியுள்ள நபர் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கவில்லை. எப்போது விசாரணை தொடங்கும் என்றும் தெரிய வில்லை.  சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தொடர்ந்து 5,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டு களில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே அமலாக்கத்துறையால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான புலன் விசாரணை யின் தொடர்ச்சி என்றே பார்க்க முடி கிறது” எனக் கூறி மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். அமலாக்கத்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரி விப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வழக்கின் விசார ணையின்போதும் உச்சநீதிமன்றம் அம லாக்கத்துறைக்கு அதிருப்தி தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.