states

‘தேசியச் சின்னத்தில் கோரமான சிங்கங்களா?’ விதிமீறல் இல்லையாம்

புதுதில்லி, அக்.1- புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறு வப்பட்ட தேசிய சின்னத்தை (அமைதியாக  அமர்ந்த நிலையில் இருக்கும் நான்கு சிங்  கங்கள்), பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த அசோக சிங்கங்கள் வழக்கமான சிங்கங்கள் போல அமைதியை வெளிப் படுத்துவது போல அல்லாமல், ஆக்ரோ ஷமாகவும், பற்கள் கோரமாக தெரியும்  வகையில் வாயை திறந்தபடி இருந்தன. வேட்டைச் சிங்கங்கள் போல காணப் பட்டன. இதற்கு அப்போதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மோடி அரசால் அசோகச் சின்னங்கள் அவமதிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்களை வைத்தன.  எனினும், மோடி அரசு அதற்கு உரிய பதி லளிக்கவில்லை. இந்நிலையில், புதிய அசோக சின்னங்  கள், “இந்திய அரசு சின்னங்கள் துஷ்பிர யோக தடுப்புச் சட்டம் - 2005-இல் அங்கீ கரிக்கப்பட்ட சிங்கங்களை போல் இல்லை” என்று அல்தானிஸ் ரெயின், ரமேஷ் குமார்  மிஸ்ரா ஆகிய வழக்கறிஞர்கள் அண்மை யில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். ‘வாய்மையே வெல்லும்’ என்ற பொருள்  படும் ‘சத்யமேவ ஜயதே’ என்ற ஸ்லோக னும் புதிய நினைவுச் சின்னத்தில் இடம்பெற வில்லை என்று கூறியிருந்த அவர்கள், தேசிய சின்னம் என்பது, தேசத்தின் மரி யாதை மற்றும் பாரம்பரியத்தின் அடையா ளம். அது இந்தியக் குடியரசு மற்றும் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதில், அர சாங்கம் தேவையில்லாமல் தலையிடும் போது, அது தேசிய உணர்வைப் புண்  படுத்துகிறது. தேசிய சின்னத்தின் அங்கீக ரிக்கப்பட்ட வடிவமைப்பில் கலைப் புதுமை கள் இருக்க முடியாது” என்றும் குறிப்பிட்டி ருந்தனர். இந்த புதிய நினைவுச் சின்னத்தை  அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலி யுறுத்தியிருந்தனர். இந்நிலையில், வெள்ளியன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வு, “இந்திய அரசு சின்னங்கள் சட்டத்தை மீறும் வகை யில், இந்த சின்னத்தில் எதுவுமில்லை” என்றும், “அவரவர் மனதுக்கு ஏற்ப எண்  ணங்கள் மாறுபடும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.