காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனை த்தும் கருகிவிடும். தண்ணீர் திறப்பு விவகாரத்தில், கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தர வை பின்பற்ற மறுக்கின்றது. எனவே, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்” என்று வாதிடப் பட்டது. “கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை தமிழகம் முறையாக பயன்படுத்தாமல் வீண டித்துவிட்டது.
கர்நாடகத்தைப் பொறுத்தவரை, இது வறட்சியான ஆண்டாக இருக்கிறது. அதே நேரம் போதிய மழை இல்லாத தால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இந்த சூழ லில், எங்களால் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும். இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது” என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது “மிகக்குறைவான அளவு தண்ணீரையே தற்போது கர்நாடக அரசு விடுவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்த ரவிட்ட அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இந்த விவகாரத்தில், உச்ச நீதி மன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை முழுமையாக கர்நாடக அரசு பின்பற்றினால் போதும்” என்று தமி ழக அரசு வழக்கறிஞர்கள்கூறினர். இதையடுத்து நீதிபதிகள், “காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஆகஸ்ட் 28 இல் நடத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறப்பு, இரு மாநிலங்களின் கோரி க்கை, மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் 28 ஆம் தேதி கூடி ஆலோசித்து முடிவெடுத்து அதன் விவரங் களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். காவிரி மேலா ண்மை ஆணைய உத்தரவை கர்நா டக அரசு முழுமையாக செயல் படுத்தி இருக்கிறதா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.