புதுதில்லி, நவ.16- மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வில், ஒன்றிய அரசு இடஒதுக் கீட்டுக் கொள்கையை மீறியிருப்பதாக வும், பொதுப்போட்டிக்கு தகுதிபெற்ற- இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களை அனு மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மருத்துவர்கள் பலர் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், நீட்-பிஜி கவுன்சிலிங்கில் இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படு கிறதா என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத் துவ பட்டமேற்படிப்புக்கு 10 ஆயிரத்து 954 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக் கும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். மொத்தமுள்ள 11 ஆயிரம் இடங்களில், முதலாவதாக பொதுப் போட்டி அடிப்படையிலான 50 சதவிகித இடங்கள் நிரப்பப்பட வேண் டும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தரவரிசை அடிப்ப டையில் (சாதி கணக்கில் கொள்ளப்படா மல்) மேற்கொள்ளப்பட வேண்டும். அதா வது, பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ - மாண வியர் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தி ருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் பொதுப் போட்டியிலேயே இடங்கள் வழங்கப்பட் டாக வேண்டும். ஆனால், அண்மையில் நடந்த நீட் - மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்வில், பொதுப்போட்டிக்கு தகுதியான- இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களை, போட் டிக்கே அனுமதிக்காமல் ஒன்றிய பாஜக அரசு அநீதி இழைத்து விட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தனிநபர் கள், மருத்துவர்கள், அமைப்பினர் என ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஹீமா கோலி, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தன. மனுதாரர் பங்கஜ் குமார் மண்டல் உள்பட பலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். ஒன்றிய அரசின் சார்பில் கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி ஆஜரானார். பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், “இட ஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பித்து அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுப்பிரிவில் சேர்க்கைக்கு தகுதி பெறுபவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இன் னும் ஒதுக்கீட்டு இடங்களே ஒதுக்கப்படு கின்றன” என்றார். அப்போது, நீட் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வில், பொதுப் போட்டிக்கு தகுதியான இடஒதுக்கீடு பிரிவு மாணவ - மாணவியரை அனுமதிக்காதது குறித்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தேர்வில் பின்பற்றப் படும் சரியான நடைமுறை குறித்து ஒன் றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், பொருளாதாரத்தில் பின்தங் கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத் திருத் தித்தின் செல்லுபடித் தன்மை குறித்தும் பதி லளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு நவம்பர் 21-இல் மீண்டும் விசார ணைக்கு வருகிறது.