நீட் தேர்வு முறைகேடு தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நடப்பாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 அன்று நடைபெற்றது. கடந்த காலங்களை போலவே நடப்பாண்டிலும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல்வேறு சர்ச்சைகளுடன் நடை பெற்ற நீட் தேர்வின் முடிவு ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலை யில், தரவரிசையில் முதல், இரண்டாம், மூன்றாமிடம் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் விபரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் கொல் கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த நிலையில், மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்காக செவ்வா யன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமானுல்லா அமர்வு,”நீட் குளறுபடி புகார்களால் தேர்வின் புனிதத் தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் நீட் தேர்வு முடிவுகளில் குளறு படி தொடர்பாக தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க முடியாது” என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 8க்கு ஒத்திவைத்தது.
ஹிஜாப் அணிந்து வர தடை வேலையை உதறிய முஸ்லிம் பேராசிரியை
மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் உள்ளது எல்ஜேடி சட்டக்கல்லூரி. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தனியார் சட்டக்கல்லூரியில் பணியாற்றி வந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பேராசி ரியை சஞ்சிதா காதரிடம் மே 31க்கு பிறகு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள் ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத பேரா சிரியை சஞ்சிதா காதர்,”எனது ஆடை, எனது உரிமை” எனக் கூறி ஜூன் 5 அன்று தனது பணியை ராஜினாமா செய்தார்.தொடர்ந்து,”கல்லூரி நிர்வாகக் குழுவின் உத்தரவு தனது மத உணர்வுகளை புண் படுத்தியதால் தனது பதவியை ராஜி னாமா செய்தேன்” என சமூகவலைத் தளங்களில் கூறியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. கர்நாடகத்தை போன்று மேற்கு வங்கத்திலும் ஹிஜாப் மூலம் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா கும்பல்கள் தனி யார் சட்டக்கல்லூரியில் பிரச்சனையை கிளப்புகிறதா என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.