states

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்கப்படும்

மதுரை, ஏப்.15- அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை யை ஓராண்டுக்குள் மீண்டும் இயக்கும் முடிவை தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் வரவேற்றுள்ளது இதுகுறித்து நமது செய்தியாள ரிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாநிலத் தலைவா் என்.பழனி சாமி, “அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ளப்படாமல் மூன்று ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. இந்த ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்கம் பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தியது. சா்க்கரை ஆலை வாயில் முன்பாக, 46 நாள்கள் தொடா்ந்து காத்திருக்கும் போராட்டம் நடத்தப் பட்டது. இப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனா். இந்த நிலையில், கரும்பு விவசாயி கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சா்க்கரை ஆலை யை ஓராண்டுக்குள் மீண்டும் செயல் பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. வேளாண் அமைச்சரின் அறிவிப்பு க்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றோம்” என்றாா். அதே நேரத்தில் எத்தனால் உற்பத்தி, மின்சார உற்பத்தியைத் தொடங்க வேண்டுமெனவும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக திருமங்கலத்தில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, அலங்காநல்லூர், பாண்டிய ராஜபுரம் ஆலைகள் தொடர்ந்து இயங்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி யிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.