மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நாராயண்பூர் ரயில் நிலையத்தை நோக்கி புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆஸ்தி ரயில் நிலையம் அருகே வந்த போது, ரயிலின் பிரேக் வேனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ அடுத்தடுத்து 4 பெட்டிகளுக்கு பரவியதை அடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் உட னடியாக இறக்கி விடப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜவேரி பஜாரில் கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 8.022 கிலோ எடையுள்ள 1.22 கோடி ரூபாய் தங்கம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) பறி முதல் செய்தது.
மோசடி வழக்கு தொடர்பாக மத்திய அமைப்பு கள் பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலை வருமான தேஜஸ்வி யாதவை வெளிநாடு செல்ல அனுமதி மறுத்து வந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் ஜப்பான் செல்ல தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவு கிறது. இதன் தாக்கத்தால் புயல் உருவாக வாய்ப் புள்ளதாகவும், அதன் தீவிரம் குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறார் பாலியல் விவகாரம் தொடர்பாக எந்த வகை உள்ளடக்கமும் யூடியூப்-இல் அனுமதிக்கப்பட வில்லை. வீடியோ உள்ளடக்கத்தின் பரவலைக் கண்டறிந்து அகற்றும் மற்றும் தடுக்கும் குழுக்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறார் பாலியல் வீடியோ குறித்து ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 39 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் திங்களன்று வெளியிட்டது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ வின் ‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் அக். 21 அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை கலம் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித் துள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்களன்று இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிந்து 66,166.93 புள்ளி களாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.17 சதவிகி தம் சரிவாகும். இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிந்து 19,731.75 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.098 சதவிகிதம் சரிவாகும். இதன்மூலம் கடந்த 3 வணிக நாள்களாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.